ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

பாஸ் இரத்தத்திலுமா நியுமராலஜி பார்ப்பீங்க ? டேய் நான் பித்ததிலும் நியுமராலஜி பார்ப்பேண்டா !




இனி வரும் காலங்களில் இதுதான் நடக்க போகிறது , சில தொலை காட்சி நிகழ்ச்சிகளில் இந்த எண்கணிதம் பலரிடம் மாட்டி கொண்டு விழி பிதுங்கி நிற்கிறது , ஆண் / பெண்  என்று வேறுபாடு இல்லாமல் எண்கணித மேதைகள் ஆலோசனை வழங்குவதை பார்க்கும் பொழுது நம்மக்களிடம் இதனை பேருக்கு சிறந்த பெயரை அவர்களது பெற்றோர்கள் வைக்க வில்லையா ? என்ற  சந்தேகமே நமக்கு வருகிறது .

பெயரியல் நிபுணர்கள் நமது தமிழ் நாட்டில் தெருவுக்கு ஒருவர் இருப்பார்கள் போல ? தொலை காட்சியில்  இவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளை பார்க்கும் பொழுது  தலை சுத்தி சுத்தி வருகிறது நமக்கு .

 உங்களின் பெயரை மாற்றி அமைத்து விட்டால் வாழ்க்கையில் அடையும் முன்னேற்றத்திற்கு அளவே இல்லை , அனைத்தும் கிடைக்கும் எனவே இப்பொழுது இருக்கும் முனுசாமி என்ற பெயரை,  இன்று முதல் மூணுசாமி என்று மாற்றி அமைத்து விட்டேன் இனிமேல் எவ்வித கவலையும் உங்களுக்கு வராது , என்னால் அனைத்தும் நல்லதே நடக்கும் என்கிற அளவுக்கு ஆலோசனை வழங்குகின்றனர்.   

( ஒரு மனுஷன இப்படிஎல்லாம கொடுமை படுத்துவது ! எவ்வளவு டீப்பா இரங்கி  யோசிக்கிறாங்க )

எண்கணித நிபுணர்களுக்கு மிக பெரிய சக்தியை இந்த ஆண்டவன் கொடுத்திருப்பாரோ , ஒருவேளை நன்கு கைகள் , நான்கு கால்கள் , நான்கு கண்கள் , இரண்டு மூளை என சிறப்பான படைப்பாகவே இவர்கள் இருக்க வேண்டும்!? இல்லை என்றால் இரண்டு கைகள் , இரண்டுகால்கள், ஒரு மூளை , இரண்டு கண்கள் கொண்டவர்கள் ஏன் அவர்களிடம் செல்ல வேண்டும்.?  

இவர்கள் சொல்லும் ஆலோசனைகள் அனைத்தும் அவர்கள் மனதில் என்ன தோன்றியாதோ அதை சொல்லி சப்பை கட்டு கட்டுவதாகவே உள்ளது ! ஒரு பெயரில் சிறுமாற்றம் செய்தால் அவருக்கு அனைத்து நலன்களும் வந்து விடுமா ? என்ன ? .

இவர்கள் அனைவரும் மனதில் ஒன்றை கருத்தில் கொள்வது நன்மை தரும் , சட்டியில் இல்லாமல் , அகப்பையில் வருவதற்கு வாய்ப்பில்லை . மேலும் எவ்வித முயர்ச்சியும் செய்யாமல் எதுவும் மாறிவிட வாய்ப்பு இல்லை , தன்னுள் இருக்கும் தனி தன்மையை உணர்ந்து , அந்தவளியில் வாழ்க்கையினை  மேம்படுத்தி கொள்வது சால சிறந்தது , நன்மையையும் தீமையும் பிறர் தர வாரா என்பதை இனியாவது உணர்வார்களா ? மக்கள் .


நீங்கள் எந்தமாதிரியான பெயரை வைத்தாலும் உங்களின் சுய ஜாதக கர்ம வினை பதிவின் படியே, நன்மை தீமை பலன் நடக்கும் என்பது சரியான கருத்து . நாமத்தின் பெயரால் பலபேருக்கு இந்த எண்கணித நிபுணர்கள் பட்டை நாமம் சாற்றி கொண்டு இருப்பது பலபேருக்கு தெரிவதில்லை புதுசு புதுசா எதையாவது சொல்லி மக்களை மண்டை காய வைப்பதே இவர்களுக்கு ஒரு வேலையாகிவிட்டது .
  
 கர்ம வினை பதிவின் படியே ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நடை பெறுகிறது , எனும்பொழுது மாற்றம் என்பதனை பெறுவதற்கு தனது கரு மையம் எப்பொழுது சுத்தம் பெறுகிறதோ அப்பொழுதே மாற்றம் நடக்க முடியும், இதற்க்கான வாய்ப்பை இறை நிலை அனைவருக்கும் வழங்கி உள்ளது இதில் விழிப்பு நிலையில் உள்ளவர்களுக்கு சுயமாகவே 
வழிகாட்டும் என்பது உண்மை . 

இதில் விழிப்பு நிலை அற்றவர்களுக்கு , சற்றே கடுமையான முயற்ச்சியை, நல்ல குரு முகமாக நின்று கற்றுகொண்டு நன்மை பெற முடியும் , என்பதனை உணர்வது அவசியம் .

ஜோதிடன் வர்ஷன் 
9443355696 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக