வியாழன், 3 டிசம்பர், 2015

நீசம் பெற்ற கிரகம் அவயோக பலன்களையும், ஆட்சி உச்சம் பெற்ற கிரகம் யோக பலன்களையும்தான் வழங்குமா ?

கேள்வி :

மதிப்பிற்குறிய ஐயா,
                    
எண் பெயா்  ராஜேஷ் குமார்  date of birth 14/02/1985,11.10 AM,cumbum (theni dist).  மூன்று மாதங்களுக்கு முன் என் நண்பா் அதா்வன  ஜோதிடா் ஒருவரிடம் என்னை அழைத்துச் சென்றாா்.என் ஜாதகத்தை பாா்த்த அவா் 9 ஆம் அதிபதி நீசம் ஆகி உள்ளாா் அதனால் நீங்கள் மிகவும் சிரமப்பட்டு தான் வாழ்க்கை நகா்த்த முடியும் பாிகாரமும் எதுவும் இல்லை உங்கள் குல தெய்வம் தான் உங்களை காப்பாற்ற வேண்டும் என்று கூறி முடித்துக் கொண்டாா்.
     +2 வில் 94% மதிப்பெண் பெற்றும் என்னால் கல்லூரி படிப்பை தொடர முடியவில்லை எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது ஆனாலூம் மிகவும் சிரமப்பட்டு கொண்டு இறுக்கிறேன் எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என்பதால் கடவுளின் பாதங்களை பணிந்து வாழ்க்கையை நகா்த்தி கொண்டிருக்கிறேன், ஐயா தயவு செய்து எனக்கு அறிவுரை கூறுங்கள்.


பதில் :

அன்பரே வணக்கம் பொதுவாக சுய ஜாதகங்களில் ஒரு கிரகமோ அல்லது ஒரு பாவக அதிபதியோ ராசி மற்றும் அம்ச கட்டங்களில் ஆட்சி அல்லது உச்ச நிலைகளில் இருந்தால், ஜாதகருக்கு மிகுந்த யோக பலன்களை வாரி வழங்கும் என்று கணிப்பதும்

சுய ஜாதகங்களில் ஒரு கிரகமோ அல்லது ஒரு பாவக அதிபதியோ ராசி மற்றும் அம்ச கட்டங்களில் நீசம் அல்லது பகை நிலைகளில் இருந்தால் மிகுந்த அவயோகத்தை வாரி வழங்கும் என்று கணிப்பதும்


சுய ஜாதகங்களில் ஒரு கிரகமோ அல்லது ஒரு பாவக அதிபதியோ ராசி மற்றும் அம்ச கட்டங்களில் நட்பு அல்லது சமம் என்ற நிலைகளில் இருப்பின் ஜாதகருக்கு மிதமான பலன்களை வழங்கும் என்று கணிப்பதும், முற்றிலும் ஜோதிட விதிகளுக்கும், ஜோதிட கணிதத்திற்கு சம்பந்தம் இல்லாத கற்பனையே அன்றி  வேறு எதுவும் இல்லை, மேலும் இதன் அடிப்படையில் ஒருவரது ஜாதகத்திற்கு பலன் காண முற்ப்பட்டால், சுயஜாதாக பாவக வலிமைக்கும், நடைமுறையில் வரும் பலாபலன்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இருக்க சிறிதும் வாய்ப்பில்லை என்பதே முற்றிலும் உண்மை.

பொதுவாக சுய ஜாதகங்களில் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு ஜாதக கணிதம் செய்யும் பொழுது ஜாதகரின் லக்கினத்திற்கும், 12 பாவக அமைப்பிற்கும் நவ கிரகங்கள் எவ்வித வலிமையை பெறுகின்றது என்று கணிதம் செய்வதே சுய ஜாதகத்தில் உண்மையான பாவக வலிமையை அறிய உதவும், மாறாக காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு நவ கிரகங்கள் பெற்ற ஆட்சி,உச்சம்,நட்பு,சமம்,பகை மற்றும் நீசம் நிலைகளை கருத்தில் கொண்டு சுய ஜாதகத்துடன் ஒப்பிட்டு பலன்கான முற்படுவது, முற்றிலும் தவறான பலாபலன்களை ஜாதகருக்கு கூறும் சூழ்நிலையை தந்துவிடும்.

உதாரணமாக :




தங்களது ஜாதகத்தில் 9ம் பாவகத்திற்க்கு அதிபதியான குரு பகவான் மகர ராசியில் நீசம் பெற்று அமர்ந்து இருப்பது ஜாதக கணிதம் அறியாத அன்பர்கள் மேலோட்டமாக காணும் பொழுது 9ம் பாவகம் 100% விகிதம் பாதிப்படைந்து விட்டதாகவும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குரு பகவான் நீசம் அடைந்ததை, தங்களது ஜாதகத்திற்கு அவயோக பலன்களை 9ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும் என்று உண்மைக்கு புறம்பாக கூறியிருக்க வேண்டும்.


ஆனால் தங்களது லக்கினத்தை அடிப்படையாக கொண்டு காணும் பொழுது 9ம் வீடு கோண வீடு, அதன் அதிபதியான குருபகவானும் கோண அதிபதி, அவர் அமர்ந்திருப்பது மகர ராசியில் உள்ள 9ம் 
( நீசம் ) பாவகத்தில், எனவே குரு பகவான் திரிகோண வீடான 9ம் பாவகத்தில் ( தனது வீட்டில் சுய பலம் பெற்று அமர்வது ) 9ம் பாவகத்தை 100% விகிதம் வலிமை பெற செய்யும்.

தங்களது லக்கினம் 

மேஷ ராசியில் 18:04:39 பாகையில் ஆரம்பித்து ரிஷப ராசியில் 45:35:29 பாகையில் முடிவடைகிறது, 
இதை அடிப்படையாக கொண்டு தங்களது 9ம் பாவக நிலையை ஆய்வு செய்யும் பொழுது, 
9ம் பாவகம் தனுசு ராசியில் 253:06:19 பாகையில் ஆரம்பித்து மகர ராசியில் 280:37:08 பாகையில் முடிவடைகிறது, 
இந்த 9ம் பாவகத்திற்க்கு உற்பட்ட 253:06:19 முதல் 280:37:08 வரை ) 
278:09:51 பாகையில் குரு பகவான் கோண பலம் பெற்று அமர்வது,
 தங்களது ஜாதகத்தில் 9ம் பாவகத்தை 100% சதவிகிதம் வலிமை பெற செய்துவிடும்,  எனவே தங்களது சுய ஜாதகத்தில் 9ம் பாவகம் மிகவும் வலிமை பெற்றே இருக்கிறது,
ஆக குரு பகவான் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மகர ராசியில் நீசம் பெற்று இருப்பது, தங்களது சுய ஜாதகத்தில் எவ்வித அவயோக பலன்களையும் வழங்க வாய்ப்பில்லை என்பதை மிகவும் உறுதியாக ஜாதக கணிதம் கொண்டு சொல்ல இயலும். 

மேலும் சுய ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்ற கிரகம் மட்டுமே ஒருவருக்கு நன்மையை தரும் என்பதும், பகை நீசம் பெற்ற கிரகங்கள் தீமையை செய்யும் என்பதும், சுய ஜாதக கணித உண்மைக்கு புறம்பான அம்சமாகவே கருத வேண்டி உள்ளது, மேலும் ஆட்சி உச்சம் பெற்ற கிரகத்தின் திசா புத்திகள், சில அன்பர்களை படுகுழியில் தள்ளியிருக்கிறது, பகை நீசம் பெற்ற கிரகத்தின் திசா புத்திகள், பல அன்பர்களுக்கு ராஜயோக பலன்களை வாரி வழங்கி இருக்கிறது என்பது எதார்த்தமான உண்மை,  சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமை நிலையும், நவகிரகங்கள் தனது திசை மற்றும் புத்திகளில் வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தியதுமே இதற்க்கு அடிப்படை காரணமாக அமைகிறது என்றால், அது மிகையில்லை.


ஒருவரின்  சுய ஜாதகத்தை முழுமையாக ஆளுமை செய்வது லக்கினம் உற்பட 12 பாவகங்களின் வலிமை நிலையும், 

வலிமை பெற்ற பாவகங்களின் பலனை ஏற்று நடத்து நவகிரகங்களின் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமும் என்றால் அது மிகையில்லை, 
ஒரு குறிப்பிட்ட  நாளில் பிறந்த பல அன்பர்களுக்கு கிரகங்கள் ஆட்சி உச்ச நிலையில் இருந்த போதிலும், அனைவரும் ஒரே விதமான யோக பலன்களை அனுபவிப்பது  இல்லை, அவரவர் லக்கினம் மற்றும் பாவக வலிமைக்கு ஏற்ப பலாபலன்களை தருகிறது, மேலும் ஆட்சி உச்சம் பெற்ற ஒரே மாதிரியான ஜாதக அமைப்பை கொண்ட அன்பர்களும், ஒரே மாதிரியான யோக பலன்களை அனுபவிக்க இயலாத நிலைக்கு காரணமாக அமைவதும் அவரவர் சுய ஜாதக பாவக வலிமையின் தன்மையே, எனவே ஒருவரின் சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமையே, அவர் அனுபவிக்கும் யோகம் அவயோகம், நன்மை தீமை பலன்களை நிர்ணயம் செய்கிறது என்ற அடிப்படை உண்மையை அனைவரும் உணர்வது அவசியமாகிறது.

தங்களது சுய ஜாதகத்தில் 9ம் அதிபதி மகர ராசியில் நீசம் பெற்று இருப்பினும், லக்கினத்திற்கு 9ம் பாவகத்திலே கோண பலம்பெற்று அமர்ந்து இருப்பது தங்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவையும், நல்ல அறிவு திறனையும், சிறந்த ஆன்மீக பெரியோர்களின் ஆசிகளையும் நிச்சயம் பெற்றுத்தரும், தங்களின் துன்பத்திற்கும், இன்னல்களுக்கும் சுயஜாதகத்தில் மற்ற பாவகங்களின் வலிமை அற்ற நிலையும், வலிமை அற்ற பாவகத்தின் பலாபலன்களை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை மற்றும் புத்திகள் ஏற்று நடத்துவதே காரணமாக இருக்கலாம் என்பதால், தங்களது சுய ஜாதகத்துடன் முறையாக நேரில் ஜாதக ஆலோசனை பெற்று தெளிவு பெறுங்கள்.


வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக