புகழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புகழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 டிசம்பர், 2014

விரைய ஸ்தானம் எனும் பனிரெண்டாம் பாவகம் வழங்கும் யோக வாழ்க்கை !




விரைய ஸ்தானம் எனும் பனிரெண்டாம் பாவகம் வழங்கும் யோக வாழ்க்கை ! எனும் தலைப்பை காணும் வாசக அன்பர்களுக்கு வியப்பு மேலோங்க வாய்ப்பு உண்டாகலாம், விரைய ஸ்தான அமைப்பில் இருந்து ஒரு ஜாதகர் என்ன யோக பலன்களை அனுபவிக்க இயலும், இந்த பாவக ஜாதகருக்கு அப்படியென்ன யோக வாழ்க்கையை தந்துவிடும் என்ற எண்ணம் வருவது இயற்கையே, பொதுவாக பாரம்பரிய ஜோதிடமுறையில் 6,8,12ம்  வீடுகள் தீய ஸ்தனமாகவே பாவிக்க பட்டு இருக்கிறது, குறிப்பாக 6,8,12ம் பாவக வழியில் இருந்து ஒரு ஜாதகர் நிச்சயம் தீய பலன்களே அனுபவிக்க நேரும் என்பதாகவே இருக்கின்றது, ஜாதகர் மேற்கண்ட 6,8,12ம் பாவக வழியில் இருந்து எவ்வித யோக பலன்களையும் அனுபவிக்க இயலாதா ? என்ற கேள்விக்கு உண்டான சிந்தனையே இந்த பதிவு அன்பர்களே ! இனி 12ம் பாவகத்தை பற்றி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம்.

வாழ்க்கையில் மனிதனின் செயல்கள் எல்லாம் மனதிருப்தி என்ற இலக்கை நோக்கியே செல்கிறது, இந்த மன திருப்தியை தருவது 12ம் பாவக வலிமையே, மன திருப்திக்காக ஒரு மனிதனை இந்த பனிரெண்டாம் பாவகம் எவ்விதம் ஆட்டி படைக்கிறது என்பதை சற்றே சிந்திப்போம் அன்பர்களே ! பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் வலிமை இழக்கும் பொழுது, ஜாதகர் தனது மனதிற்கு திருப்தியை தருவது எதுவென்று அறியாமல் கடுமையான குழப்பத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தருகிறது, உதாரணமாக ஜாதகர் மது பழக்கத்திற்கு அடிமையாகும் முன்பு, தனக்கு மன திருப்தியை தருவதாக மற்றவர்கள் சொல்ல கேட்டு, மது பழக்கத்திற்கு அறிமுகமாகிறார், இறுதியில் ஜாதகரின் மனம் திருப்தியை பெறுகிறதா ? என்றால் நிச்சயம் இல்லை, மது பழக்கத்தால் ஜாதகரின் மனம் திருப்தியை பெற்று இருந்தால் உண்மையில் ஜாதகர் அந்த பழக்கத்தில் இருந்து 100% சதவிகிதம் விடுபட்டு அல்லவா இருக்க வேண்டும், ஆனால் நடப்பது என்ன ? ஜாதகர் மீண்டும் மீண்டும் தொடர்ந்து செய்து மன திருப்தியை தேடுகிறார்.

இதை போன்றே அனைத்து தீய பழக்கத்திற்கும் காரணமாக ஜாதகரின், வலிமை அற்ற 12ம் பாவக நிலை அடிகோலுகிறது, இந்த 12ம் பாவகம் வலிமை அற்று போகும் அன்பர்களின் மனதை, மற்றவர்கள் மிக எளிதில் தங்கள் வசப்படுத்தி கொண்டு தங்களுக்கு சாதகமான விஷயங்களை நிறைவேற்றி கொள்கின்றனர், ஒரு அரசியல்வாதி தனது தொண்டனை அடிமையாக வைத்திருக்கவும், ஒரு திரைப்பட நடிகர் தனது ரசிகர்களை தனது கைக்குள் வைத்திருக்கவும், ஒரு தீவிரவாத தலைவன் தனக்கு கிழ் சிலரை மூளை சலவை செய்து அடிமைகளாக வைத்திருக்கவும், போலி ஆன்மீகவாதி தனது சீடர்களை தனக்கு கிழ்படிந்து நடக்கும் சீடனாக சில நபர்களை பேச்சில் மயக்கி வைத்திருக்கவும், அவர்களின் 12ம் பாவக வலிமையற்ற தன்மையே காரணமாக அமைகிறது, மனிதர்களை மன ரீதியாகவும் உணர்ச்சிகள் ரீதியாகவும் மிக எளிதில் அணுகி அவர்களுக்கு ஒரு மாய தோற்றத்தை ஏற்ப்படுத்தி அவர்களை தன்வசபடுத்த அவர்களின் ஜாதகத்தில் 12ம் பாவக நிலை வலிமை அற்ற தன்மையில் இருப்பதே காரணம் என்றால் அது மிகையில்லை அன்பர்களே !

12ம் பாவகம் வலிமையற்று போகும் பொழுது அந்த ஜாதகர் தனது மனதிற்கு திருப்தி தருவது எதுவென்று அறியாமல் குழப்பத்தின் நடுவிலேயே வாழ்க்கையை நகர்த்தும் சூழ்நிலையை தருகிறது , குழப்பம் என்பது ஒருவருக்கு வந்துவிட்டால் அவர் சரியான முடிவு எடுப்பது என்பது குதிரை  கொம்பாகிவிடும், இவருக்கு சரியான முடிவை தருவது போல் ஒரு மாய தோற்றத்தை ஏற்ப்படுத்தி, அவர்களது தேவைகளை பூர்த்தி சொய்துகொள்ளும் ஆட்களும் உண்டு, ஒருவர் தான் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் விளைவு அறிந்து செயல்பட அவரது சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் மிக மிக வலிமையுடன் இருப்பது அவசியம் ஆகிறது, மேலும் தனது மனதில் ஏற்ப்படும் குழப்பங்களுக்கு தானே தீர்வை தேடும் வல்லமை பெற 12ம் பாவக வலிமை 100% விகிதம் உதவி புரியும் என்பதில் மற்று கருத்து இல்லை அன்பர்களே, வாழ்க்கையில் சிலர் திடீர் என முடிவெடுத்து தற்கொலை செய்துகொள்ளும் சூழ்நிலைக்கு ஆளாக்குவது இந்த  12ம்  பாவக வலிமை அற்ற தன்மையே என்றால் அது மிகையில்லை, அற்ப காரணங்களுக்காக வாழ்க்கையை முடித்துகொள்ளும் எண்ணத்தை ஜாதகருக்கு தருவது இந்த 12ம்  பாவகத்தின் வலிமை அற்ற தன்மையே  காரணமாக அமைகிறது அன்பர்களே !

வாழ்க்கையில் ஒரு ஜாதகர் தான் எடுக்கும் முடிவுகள் சரியானதா ? அல்லது தவறானதா என்பதை தனது அறிவுக்கு உற்படுத்தி மன ரீதியான தெளிவை பெற சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் மிக வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, ஒருவரது மனதில் குழப்பம் வரும் பொழுது உயிர் சக்தி விரையபடுத்த  படுகிறது, தேவையற்ற சந்தேகம், பயம் மற்றும் மன தைரியம் யாவும், ஜாதகரை ஒரே இடத்தில் முடக்கி வைக்கிறது, அயன சயன சுகம் எனும் நிம்மதியான தூக்கம் வராமல் ஜாதார் மனோ ரீதியாக கடுமையான பாதிப்பை சந்திக்கும் சூழ்நிலை உருவாகிறது, நல்ல தூக்கமே ஒருவரை மன ரீதியாகவும் , உடல் ரீதியாகவும் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும், சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் பாதிக்கப்படும் பொழுது இது கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.

பொதுவாக சுய ஜாதகத்தில் 12ம் பாவகத்தை தீய ஸ்தானமாகவே பாவித்து பலன் காண்பது 
முற்றிலும் தவறான அணுகுமுறையாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, ஏனெனில் 12ம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் தனது இயல்பு மாறாத தன்மையுடன் விளங்க செய்கிறது, எவ்வித சூழ்நிலையையும் தாங்கும் மன வலிமையை தருகிறது, தனது எண்ணங்களின் வலிமையின் மூலம் அனைத்தையும் சாதிக்கும் யோக வாழ்க்கையை ஜாதகர் பெற முடிகிறது, ஆன்மீகத்தில் சிறந்து விளங்க ஒருவரின் ஜாதகத்தில் 12ம் பாவகம் வலிமை பெறுவது அவ்ச்சியமாகிறது மேலும் 12ம் பாவகம் நீர் தத்துவ ராசியில் அமைவது மோட்ச வாழ்க்கையை 100 சதவிகிதம் வழங்கும் என்பதும், சர நீர் தத்துவத்தில் 12ம் பாவகம் அமைவதும் வலிமை பெறுவதும் ஜாதகர் ஆன்மீகத்தின் மூலம்  முக்தி பெரும் யோகத்தை தரும், திருப்தி அடைவது என்பது 12ம் பாவகத்தின் தன்மை எனும் பொழுது, ஆன்மா முக்தி பெற்று திருப்தியான பூர்ணத்துவத்தை பெறுவது மேற்கண்ட பாவகத்திலே என்றால் அது மிகையில்லை அன்பர்களே.

பொதுவாக காதலில் 100% விகிதம் வெற்றி பெற்று காதல் திருமணத்தின் மூலம் பரிபூரணத்தை அடைவதற்கு 12ம் பாவக வலிமை மிக மிக அவசியம் தேவை, காதலில் தோல்வி அடைவதும், காதல் தோல்வியின் மூலம் வாழ்க்கையில் விரக்தியின் உச்சிக்கே கொண்டு செல்வது 12ம் பாவகத்தி தன்மையே, இதன் விளைவுகளாக தற்கொலைக்கு முயற்ச்சி செய்வதும், ஸ்திர தன்மையில்லாத காதல் வாழ்க்கையை மேற்கொள்ள வைப்பதும் 12ம் பாவகமே, போதும் என்ற மன நிலையை தாராமல், தொடர்ந்து அடுத்து அடுத்து என்று அலைபாயும் மன நிலையை தருவதும் 12ம் பாவகமே, எதுவும் இல்லை என்றாலும் இருப்பதை வைத்து சிறப்பாக வாழும் வல்லமையை தருவது 12ம் பாவக வலிமையே, ஒருவரின் தேடுதலுக்கு எல்லாம் ஒரு முற்று புள்ளியை வைப்பது 12ம் பாவக வலிமையே, அது பொருள் சார்ந்தது என்றாலும் சரி அறிவு,மனம் மற்றும் இயக்கம் சார்ந்தது என்றாலும் சரி நிச்சயம் இறுதியில் திருப்தி என்ற மன நிலைக்கு ஜாதகரை அழைத்து செல்லும் வல்லமையை தருவது மேற்கண்ட அயன சயன ஸ்தானமே.

இதை தெளிவாக வேதாத்திரி மகரிஷி அய்யா அவர்கள் " தேடுவதை விட்டுவிட்டால் அனைத்தும் அங்கேயே இருப்பது புலனாகும் " எனும் வேதவாக்கின் மூலம் நமக்கு தெளிவு பட நம் அனைவருக்கு சிந்தனையில் உரைக்கும் வண்ணம் அருளியிருக்கிறார், புலனுக்கு எட்டாத அறிவு ஆற்றலை நமக்கு தருவது 12ம் பாவக வலிமையே என்றால் அது மிகையில்லை, 12ம் பாவகம் வலிமை பெறவில்லை எனில் ஒரு ஜாதகரால் தனது அலைபாயும் மன ஆற்றலை ஒருமுகமாக கட்டுபடுத்த இயலாது, ஒன்று படுத்தபட்ட சக்தியை எவ்விதத்திலும் பிரயோகிக்கவும் இயலாது, அருங்குண நலன்களை சீரமைக்கவும்  இயலாது, ஐம்புலன்களையும் கட்டுக்குள் கொண்டு வரவும் இயலாது, மிக துல்லியமாக சொல்ல வேண்டும் எனில் ஜாதகர் தன்னை சுய கட்டுப்பாட்டின் கிழ் கொண்டு வரவும், ஒரு இலக்கை நோக்கி பயணம் செய்ய வைக்கவும் 12ம் பாவக உதவி நிச்சயம் தேவை அன்பர்களே.

 ஒருவருக்கு லக்கினம் எனும் முதல் பாவகம் சிறப்பாக இயங்க வேண்டும் எனில் லக்கினத்திற்கு மேல் இருக்கும் 12ம் பாவகம் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, ஜாதகரின் இயக்கத்தை ஆளுமை செய்யும் தன்மையும் 12ம் பாவகத்திற்கு 100% சதவிகிதம் உண்டு, லக்கினம் சிறப்பு பெறுவது ஒரு வகையில் நன்மை என்ற போதிலும் 12ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகரை 100% விகிதம் சிறப்பாக செயல்பட வைக்கும், ஒருவரின் மன திருப்தியே பூரணத்துவத்தை தருகிறது என்றால், அவரது ஜாதகத்தில் அயன சயன ஸ்தானம் வலிமையுடன் இருப்பது முக்கியம் என்பதை கருத்தில் கொள்வது நலம் அன்பர்களே, அயன சயன ஸ்தானம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் தன்னிலை உணர்வதும், சுய திருப்தி பெறுவதும் இயற்கையாக நடைபெறும், ஒரு ஆன்மீக வாதியையோ, ஒரு நடிகரையோ, ஒரு அரசியல் தலைவரையோ நாடி செல்லும் சூழ்நிலையை தராது, மேற்க்கண்டவர்கள் உண்மையானவர்களாக இருந்து விடில் ஜாதகருக்கு பிரச்சனை இல்லை, அதற்க்கு நேர் மாறாக இருப்பின் ஜாதகர் நிச்சயம் மூளை சலவை செய்து நம்ப வைக்கபடுவார், இதற்க்கு காரணமாக விரைய ஸ்தானம் வலிமை அற்ற நிலை காரணமாக அமைந்துவிடும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 19 நவம்பர், 2014

எண்கணிதம் ஒருவரின் வாழ்க்கையில் நடத்தும் மாயாஜாலங்கள் ! தொடர்ச்சி.....


இனி 2 வது உதாரண பிறந்த தேதியை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே :

தமிழகத்தை முதல்வரகளாக ஆட்சி செய்த மூன்று தலைவர்களின் பிறந்த தேதியை எடுத்து கொள்வோம், அதில் இரண்டாவதாக புரச்சி தலைவர் MGR அவர்களின் பிறந்த தேதி மற்றும் பலன்கள்  



புரட்சி தலைவர் எம்ஜிஆர் பிறந்த தேதி ( 17/01/1917 )
நமது எண்கணித முறைப்படி    8-1-9-9

பிறந்த தேதியில் 8ம் எண் வந்தது ஜாதகரை சிறு வயதிலேயே பல சிரமங்களுக்கு ஆளாக்கியது, வறுமையின் கோர பிடியில் சிக்கி ஜாதகர் சிறு வயது முதல் தனது 15வது வயது வரை பல சிரமங்களை எதிர்கொள்ளும் தன்மையை தந்தது, அடிப்படையில் ஜாதகரின் கல்வி வாழ்க்கையை கேள்விக்குறியானது, ஜாதகர் தனது பெற்றோர் வழியில் இருந்து பெரும் நன்மையில் சிறிதேனும் அனுபவிக்க இயலாத தன்மையை தந்தது, அவரது பெற்றோருக்கும் பல சிரமங்களை வாரி வழங்கியது, ஜாதகரின் முயற்சிகள் யாவும் மிகப்பெரிய தோல்விகளையே வழங்கியது, பால்ய பருவத்திலே பசியின் கொடுமையை உணர்ந்தவர் என்பதால் பின்னாளில் தனது வீட்டுக்கு வரும் எவரும் வெறும் வயிற்றுடன் செல்லக்கூடாது என்ற கொள்கையை வைத்திருந்தார், பொதுவாக 8ம் எண் ஒரு மனிதருக்கு உலக பிரபலத்தை தந்த போதிலும் சுய வாழ்க்கையில் பிரகாசிக்காத தன்மையை தந்துவிடுகிறது, ஊருக்கு உத்தமன் வீட்டிற்கு ஊதாரி என்ற பழமொழியை நினைவுகூர வைத்துவிடுகிறது, 8ம் எண்ணில் பிறந்த ஒவ்வொருவரின் உழைப்பும் மற்றவருக்கே பலன் தருகிறது சம்பந்தபட்டவருக்கு பெரிய நன்மைகளை தருவதில்லை, தலைவர் இறுதி வரை தனக்காக எதையும் எடுத்துக்கொள்ளவில்லை என்பதை நினைவு கூர்வது அவசியம், 8ம் எண்ணை சார்ந்தவர்கள் பல சிரமங்களை அனுபவித்த போதிலும் நேர்மை மாறாத குணம் அவர்களை புகழின் உச்சிக்கே எடுத்து செல்கிறது என்பதை மறுக்க இயலாது.

பிறந்த தேதியில் மாதத்தில் 1ம் எண் வந்தது ஜாதகரை இளம் வயதிலேயே சோர்வு அறியாத கடின உழைப்பாளியாக நிலைநிறுத்தியது, தான் எடுத்துக்கொண்ட கொள்கையிலும், லச்சியத்திலும் குறிக்கோளாக இருந்து வெற்றி கனியை பறிப்பதற்கு உண்டான ஆளுமையை தந்தது, இளம் வயதில் சிரமபட்ட போதிலும், 15 வருடங்களுக்கு பிறகு ஜாதகர் தனது 30வது வயது வரை சகல விஷயங்களிலும் தேர்ச்சியும், நுண்ணறிவையும் பெரும் யோகத்தை தந்தது, சூரியனுக்கு உரிய 1ம் எண் ஜாதகருக்கு 15 முதல் 30 வயது வரை தனி திறன்களை வளர்த்துகொள்ளும் வாய்ப்பையும், தடை பட்ட கல்வியை தனது சுய முயற்ச்சியின் மூலமே கற்றுகொள்ளும் யோகத்தை தந்து, ஜாதகருக்கு அரசியில், கலைத்துறை, பொதுமக்களின் ஆதரவு இதற்குண்டான அறிமுகங்களை வழங்கிய காலம் இதுவென்றால் அது மிகையில்லை, ஒரு சிறந்த புகழ் பெற்ற மனிதராக பரிணமிக்க அடிப்படை அடித்தளம் அமைந்த காலம் இதுவே, எனவே ஜாதகர் சகல விஷயங்களையும் கற்று தேர்ந்த காலம் இதுவென்றால் அது மிகையில்லை.

பிறந்த தேதியில் வருடத்தில் 9ம் எண் வந்தது ஜாதகரை படி படியாக வெற்றிபடிகளில் கால் வைக்கும் யோகத்தை தந்தது எனலாம், ஜாதகர் தனது 30 வது வயது முதல் 45 வது வயது வரை வெற்றி படிகட்டுகளில் ஏற ஆரம்பித்த காலம் என்றால் அது மிகையில், தொடர் வெற்றிகளை கொடுக்கும் எண்ணான 9ம் எண்ணில் பயணம் செய்த புரட்சி தலைவர் தனது தனிப்பட்ட திறன்களையும், நல்ல குணங்களையும் பொதுமக்களுக்கு கலை துறை மூலம்  பிரதிபலித்தார், மேலும் மக்களின் பேர்அன்பிற்கும், பெரும் மதிப்பிற்கும் உரியவர் என்ற நிலையான நம்பிக்கையை மக்கள் மனதில் பசுமரத்தில் பதித்த ஆணி போல் மக்களின் மனதில் உயர்ந்து நின்றார், 9ம் எண்ணான செவ்வாயின் ஆதிக்கம் மக்கள் மனதில் நிலையான கதாநாயகன் அந்தஸ்தை பெற்று தந்து, இவரின் முகம் பார்க்க மக்கள் ஏங்கி கிடந்தனர், இவரின் வார்த்தைக்கு தமிழகமே கட்டுபட்டது, இவர் பயணம் செய்த 9ம் எண் ( 30 முதல் 45 வயது வரை ) தனது துறையிலும் தனிப்பட்ட வாழ்கையிலும்  பிரகாசிக்க வைத்த காலம் இதுவென்றால் அது மிகையில்லை.

பிறந்த தேதியில் கூட்டு எண்ணாக மீண்டும் 9ம் எண் வந்ததே ஜாதகரின் அபரிவிதமான வெற்றிக்கும், பொருளாதார ரீதியான உச்சத்திற்கும் கொண்டு சென்றது, ஜாதகரின் 45 வயது முதல் வாழ்வின் இறுதி வரை தொடர் வெற்றிகளையே வாரி வழங்கியது, ஜாதகருக்கு பிறந்த எண்களில் வெற்றிகளை குவிக்கும்  9ம் எண் மீண்டும் வந்தது, கலைத்துறை, அரசியல், பொதுவாழ்க்கை ஆகிய அமைப்பில் உச்ச நிலையை பெற வைத்தது, ஜாதகருக்கு பிறந்த தேதியில் வந்த 8ம் எண் வறுமையின் உச்சத்தை பார்க்க வைத்தது, வருடம் மற்றும் கூட்டு எண்ணில் வந்த 9ம் எண்கள் ஜாதகரை வசதி வாய்ப்பு மற்றும் புகழின் உச்சத்தை பார்க்க வைத்தது, ஜாதகருடன் மோதிய பலரது வாழ்க்கை கேள்விக்குறியாக மாறியது, வெற்றி தேவதையின் பரிபூரண பிடியில் ஜாதகர் உலா வந்த காலம் இதுவென்றால் அது மிகையில்லை, ஜாதகரை புகழின் உச்சிக்கும் உலக அளவில் பிரபலம் பெரும் யோகத்தையும் தந்த காலம் இதுவே, ஜாதகர் கலை துறையில் பல வெற்றிகளை குவிக்கவும், அரசியலில் கொடிகட்டி பறக்கவும் மேற்கண்ட செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற 9ம் எண்ணே வழிவகுத்தது எனலாம், ஒருவரின் பிறந்த தேதியில் 9ம் எண் வருவது வெற்றிகரமான வாழ்க்கையை உறுதி செய்யும், பெயரும் 9ம் எண்ணில் அமைந்தது  ( MGR ) வெற்றியின் சதவிகிதத்தை 200% வாரி வழங்கியது என்பதை நாம் இதன் மூலம் தெளிவாக உணரலாம்.

அன்பர்களே ! எண்களின் வலிமை பலன் தருவது, அதன் ஆதிக்கத்தின் கிழ் பயணம் செய்யும் பொழுது மட்டுமே என்பதை உணர்வது அவசியம் ஒருவரின் பிறந்த தேதியில் இருக்கும் எண் மற்றும் கூட்டு எண் ஆகியவை மற்றுமே ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயம் செய்து விடாது நமது எண்கணித முறைப்படி பிறந்த தேதி, மாதம், வருடம் மற்றும் கூட்டு எண் ஆகியவை அனைத்தும் ஒருவரின் வாழ்க்கையில் அதன் ஆதிக்கத்தின் கிழ் பயணம் செய்யும் வயதுகளில் யோக அவயோக பலன்களை எண்களின் தன்மைக்கு ஏற்றார் போல் பலன் தரும், பொதுவாக இவரது பிறந்த தேதியை வைத்து பலன்களை நிர்ணயம் செய்யும் எண் கணித நிபுணர்கள் இவரது வெற்றிக்கு காரணம் 8ம் எண்ணாக வர்ணிப்பது உண்டு, உண்மை அதுவல்ல இவரது பிறந்த தேதியில் வருடம் மற்றும் கூட்டு எண்ணில் இருக்கும் 9ம் எண்ணுக்கே அந்த பெருமையெல்லாம் சாரும் என்பதை எண்கணித ஆர்வலர்கள் புரிந்துகொள்வது சிறப்பு, 8ம் எண் ஜாதகருக்கு கடமை,கண்ணியம்,கட்டுப்பாட்டுடன் நேர்மையையும் வழங்கியது என்பதை மறுக்க இயலாத போதிலும், இவரது புகழ் மிக்க வெற்றிகரமான வாழ்க்கையை நிர்ணயம் செய்தது நிலையான வெற்றிகளை வாரி வழங்கும் 9ம் எண் என்றால் அது மிகையில்ல அனபர்களே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 2 நவம்பர், 2014

சாதாரண மனிதன் உலக புகழ் பெறுவதிற்கு காரணம் சுய ஜாதகத்தில் உள்ள யோக நிலையா ? கடின உழைப்பா ?




 புகழ் பெற்ற ஒருவரின்  ஜாதகத்தை பார்க்கும் ஜோதிடர்கள் அனைவரும், அவரது புகழுக்கும் வெற்றிக்கும் காரணம் அவரது சுய ஜாதகத்தில் உள்ள யோக நிலையே என்று கூறுவது வாடிக்கையானதே, மேலும் அவரது ஜாதகத்தில் கிரக நிலைகள் மிக சிறப்பாக இருந்தது, அதன் காரணமாக அந்த ஜாதகர் புகழ் பெற்ற ஆன்மீக பெரியவராகவோ, நடிகராக, அரசியல் தலைவராக, சமுதாயத்தில் புகழ் மிக்க பெரிய மனிதராக வளம் பெற்றார் என்ற வாதத்தை ஜோதிடதீபம் வேறு விதாமாக பார்க்கிறது, ஏனெனில் குறிப்பிட்ட ஜாதகருக்கு சில யோக நிலை இருந்த போதிலும் அதே அமைப்பை பெற்ற சில ஜாதகங்கள் வெற்றி பெற இயலாமல் போக காரணம் ஏன் ? என்பதை பற்றி இந்த ஆய்வில் சிந்திப்போம் அன்பர்களே !

 உதாரண ஜாதகம் :


லக்கினம் : சிம்மம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : திருவோணம் 

மேற்கண்ட சிம்ம இலக்கின ஜாதகரை தமிழகத்தில் அறியாதவர்களே இல்லை  எனலாம், ஏன் ? உலக அளவில் இவர் பிரபலமான நடிகர், ஆரம்பத்தில் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து, திரைப்பட துறையில் பெரிய புகழும், வெற்றியும் பெற்று உலகத்தை தன்பால் திரும்பி பார்க்க வைத்தவர், இயற்கையில் இவரது ஜாதகம் யோகம் நிறைந்ததா ? அல்லது ஜாதகரின் கடின  உழைப்பு ஜாதகருக்கு பல வெற்றிகளையும், உலக புகழையும் தேடி தந்ததா? என்பதை பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் , முதலில் ஜாதகருக்கு பாவக தொடர்புகளை  பற்றி ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் .

1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம், 2,4.6,8,10,12ம் வீடுகள் எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம், ஆக இவரது ஜாதகத்தில் எந்த ஒரு திசை பலனை தந்தாலும்  சரி ஒன்று 11ம் பாவகமான லாப ஸ்தான பலனை தரவேண்டும், அல்லது 6ம் பாவகமான எதிரி ஸ்தான பலனை தர வேண்டும், இதை தவிர வேறு பாவக  பலன்கள் நடைமுறைக்கு வர வாய்ப்பில்லை, எனவே 6,11 ம் பாவக அமைப்பை காணும் பொழுது 6ம் பாவகம் ஜாதகருக்கு மகரத்தில் 290:14:45 பாகையில் ஆரம்பித்து, கும்பத்தில் 320:15:29 பாகையில் முடிவடைகிறது , இந்த மகரமும் கும்பமும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீடாகவும், 11ம் வீடாகவும் வருவது கவனிக்க தக்கது, ஏனெனில் இங்கே ஜாதகருக்கு 6ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானமாக  வருவதால் கடின உழைப்பையும், நிலையான அதிர்ஷ்டத்தையும் தந்தது, சர மகர ராசி மண் தத்துவ அமைப்பில் இருந்து ஜாதகருக்கு கடின உழைப்பையும், ஸ்திர கும்ப ராசி காற்று தத்துவ அமைப்பில் இருந்து நிலையான ( ஸ்திரமான ) அதிர்ஷ்டத்தையும், வாரி வழங்கியது. இதன் காரணமாகவே ஜாதகர் தான் ஏற்று கொண்ட தொழிலை  சிறப்பாகவும் செம்மையாகவும் பணியாற்ற முடிகிறது,
    
11ம் பாவக அமைப்பை காணும் பொழுது 11ம் பாவகம் ஜாதகருக்கு மிதுனத்தில் 80:42:17 பாகையில் ஆரம்பித்து கடகத்தில் 110:14:45 பாகையில் முடிவடைகிறது. இந்த மிதுனமும் கடகமும் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு முறையே 3ம் வீடாகவும், 4ம் வீடாகவும் வருகிறது, ஜாதகருக்கு 11ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முயற்ச்சி ஸ்தானமாகவும், சுக ஸ்தானமாகவும் வருவதால், ஜாதகருக்கு மக்கள் மத்தில் நல்ல தொடர்பு கிடைத்தது ( 3ம் பாவகம் மக்கள் தொடர்புகளை  பற்றியும் சொல்லும்) சுக ஸ்தான அமைப்பில் இருந்து  சொத்து சுக  சேர்க்கையும் மிக பெரிய தன சேர்க்கையையும் தந்தது , இதுவெல்லாம்  இந்த ஜாதகருக்கு சுய ஜாதக ரீதியாக அமைந்தது, மேலும் இந்த ஜாதகர் பாவக வழியில் இருந்து எவ்வித பாதிப்பை பெற்றார் என்பதை பார்ப்போம், சுய ஜாதக அமைப்பின் படி ஜாதகருக்கு பாதிப்பை தரும் அமைப்பு 6,12ம் பாவகங்கள் மட்டுமே, வேறு எந்த பாவகமும் ஜாதகருக்கு பாதிப்பை தரவில்லை , மேற்கண்ட பாதிப்புகள் ஜாதகருக்கு உடல் சார்ந்த அமைப்பில் மட்டுமே இருப்பதால் ஜாதகருக்கு அவை பெரிய பதிப்பை தரவில்லை, பொருளாதார வசதி ஜாதகருக்கு உடல் நலத்தை பாதுகாத்தது, ஆக ஜாதக அமைப்பில்  நல்ல யோக அமைப்புகளே இருப்பதால், ஜாதகர் வெற்றி பெற்றார் என்று எடுத்துகொள்லாமா ? முற்றிலும் இல்லை அன்பர்களே ! ஜாதகர் 11ம் பாவக  வழியில் இருந்து தனது அதிர்ஷ்டத்தை எப்படி அபிவிருத்தி செய்து கொண்டார் என்பதை இனி பார்ப்போம் .

தமிழர்களுக்கு மிகப்பெரிய குணம் ஒன்று உண்டு, அதாவது " வந்தாரை வாழவைக்கும் தமிழகம் " என்ற வார்த்தைக்கு ஏற்ப, இவரது நடிப்பிற்கும், வித்தியாசமான நடைமுறைக்கும், ஈர்க்க பட்ட மக்கள் ஜாதகரை வெகுவாக வாழ்த்த ஆரம்பித்தனர், அவர்கள் மனதில் ஜாதகர் நிரந்தரமாக கதாநாயகனாக அமர்ந்துகொண்டார், அவரது ஒவ்வொரு ரசிகனின் மனதிலும் பெரிய அளவில் உயர்ந்து நின்றார், ரசிகனின் எண்ண அலைகள் யாவும் ஒன்று சேர்ந்து ஜாதகரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது ( ரசிகன் வீட்டில் குடிப்பதற்கு கஞ்சி இல்லாமல் கிடப்பான் அது வேறு விஷயம் ஆனால் தனது தலைவன் மிகவும் நல்லவர் என்ற எண்ணம் தீர்க்கமாக இருக்கும் ) , ஜாதகர் வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற வைத்தது, ஆக ஜாதகரின் யோக அமைப்பும், மக்கள் செல்வாக்கும் மக்களின் எண்ண அலைகளும், அவர்களின் வாழ்த்துகளும் ஒன்று சேரும் பொழுது ஜாதகர் வெற்றிகரமாக புகழின் உச்சிக்கு மிக எளிதாக சென்று வெற்றிக்கொடி நாட்டமுடியும் என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து, வெற்றி பெற்ற பல மனிதர்களுக்கு பின்னல் அவர்களது ரசிகர்,தொண்டர்,பணியாளர்களின் நல்ல எண்ண அலைகளும், வாழ்த்துகளும் ஓங்கி நிற்கும் என்பதை எவராலும் மறுக்க இயலாது அன்பர்களே!.

அரசியல் தலைவர்கள், திரைப்பட நடிகர், ஆன்மீகபெரியோர், தொழில் அதிபர்கள், சமூக பெரிய மனிதர்கள் அனைவரின் புகழ் மிக்க வெற்றிக்கு பின்னல் அவர்களது தொண்டர்கள், ரசிகர்கள், பணியாளர்கள், பொதுமக்களின் எண்ண அலைகளும் , அவர்களது வாழ்த்துகளும் ஒன்று சேர்ந்தே  மேற்கண்ட நபர்களின் வெற்றியும், பொருளாதார முன்னேற்றத்தையும் அபரிவிதமாக பெற முடிகிறது,  ( சுய ஜாதகத்தில் யோக அமைப்பு இருந்த போதிலும் ) மேற்கண்ட நபர்களின் வெற்றிக்கு அவர்களது தொண்டர்கள், ரசிகர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் நல்ல எண்ணங்களே , அடிப்படை காரணமாக அமைகிறது, என்ற கருத்தை இங்கே ஜோதிடதீபம் பதிவு செய்ய விரும்புகிறது.

உதாரண ஜாதகத்தை இன்னும் சற்றே ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே ! 

ஜாதகர் பிறந்ததில் இருந்து தற்பொழுது உள்ள வரை நடைபெறும் திசைகள் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்று பார்ப்போம் 1

பிறப்பில் ஜாதகருக்கு சந்திரன் திசை 1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 2வதாக செவ்வாய் திசை 1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 3வதாக ராகு திசை 1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 4வதாக குரு திசை 1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 5வதாக தற்பொழுது நடைபெறும் சனி திசை 1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும் தந்து கொண்டு இருக்கிறது, ஜாதகருக்கு தீமையை செய்யும் திசை அல்லது புத்தி என்று பார்க்கும் பொழுது சூரியன் கேது மட்டுமே அதிக தீமையை ஸ்திரமாக செய்யும் என்பது உறுதியாகிறது, எனவே ஜாதகருக்கு சிரமம் என்ற நிலை சூரியன்,கேது புத்தி,அந்தரம்,சூட்சமம் போன்ற காலங்களிலேயே நடைபெற்று இருக்கும் என்பதை ஆய்வின் மூலம் தெரிந்துகொள்ளலாம் அன்பர்களே !

பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் 5,11ம் பாவகங்கள்  நல்ல நிலையில் இருப்பின் கலை துறையில் மிகப்பெரிய இடத்தை பெற முடியும், தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பின் பெயரும் புகழும் ஜாதகருக்கு வெகு விரைவில் கிடைக்கும் இது உறுதி, 5ம் பாவகம் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருப்பின் ஜாதகருக்கு ஆய கலைகள் 64 ல் நல்ல  புலமையும், பண்டித்தியமும் நிச்சயம் இறை அருளால் கிடைக்கும், 5ம் பாவகம் என்பது ஜாதகரின் சுய அறிவாற்றலையும் சமயோசித புத்திசாலிதனத்தையும் வெளிபடுத்தும், நவரசம் சொட்டும் முகபாவகங்கள் மிக எளிதாக கைவர பெறுவார்கள் என்பது குறிப்பிட தக்கது, மேற்கண்ட ஜாதகருக்கு 5ம் பாவகம் லாப ஸ்தானதுடன் தொடர்பு பெற்று, லாப ஸ்தானம் மிதுனம் கடகம் ராசி கலப்பில் அமைந்ததால் மேற்கண்ட புகழும் வெற்றியும், கலைத்துறையில் மிக எளிதாக பெற முடிந்தது, மேலும் 1ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு முற்போக்கு சிந்தனையும், தன்னம்பிக்கையையும் தந்தது, 3ம் பாவக வழியில் இருந்து விடாமுயர்ச்சியையும், நினைத்ததை சாதிக்கும் வல்லமையை தந்தது, 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சிறப்பான நடிப்பு திறனை தந்தது, 7ம் பாவக வழியில் இருந்து பொதுமக்கள் ஆதரவையும், மக்களிடம் முகமதிப்பையும் பெற்று தந்து, 9ம் பாவக அமைப்பில் இருந்து சமுதாயத்தில் நல்ல மனிதர் என்ற பெயரை பெற்று தந்து,11ம் பாவக வழியல் இருந்து மிகப்பெரிய அதிர்ஷ்டத்தையும், யோக வாழ்க்கையையும் வாரி வழங்கியது.

சுய ஜாதகத்தில் 6ம் பாவகம் வலிமை பெரும் பொழுது, ஜாதகருக்கு அவரது எதிரிகள் செய்யும் சூல்சியே மிகப்பெரிய வெற்றியையும், முன்னேற்றத்தையும் வாரி வழங்கி விடும், மேலும் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார்கள், இவரது வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம், மேலும் ஜாதகர் 2,4,8,10ம் வீடுகள் 6ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 2,4,8,10ம் பாவக வழியில் இருந்து 100% யோகத்தை வாரி வழங்கி இருப்பது கண்கூடான விஷயம், 2ம் பாவக வழியில் இருந்து பல தலைமுறைக்கு உண்டான வருமானம் ஜாதகரே சம்பாதிக்கும் வல்லமையை தந்தது , 4ம் பாவக வழியில் இருந்து அபரிவிதமான சொத்து சுக சேர்க்கையை தந்தது, 8ம் பாவக வழியில் இருந்து புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை திடீரென குறுகிய காலத்தில் தந்தது, 10 ம் பாவக வழியில் இருந்து சிறந்த கௌரவம், அந்தஸ்து, புகழ், ஸ்திரமான ஜீவனம் என்ற அமைப்பை தந்தது. 

இருப்பினும் இந்த ஜாதகருக்கு 12ம் பாவகம் கடுமையாக பாதிக்கபட்டு இருப்பதால் மன நிம்மதி என்ற விஷயம் வெகுவாக பாதிக்கபடுகிறது , இதன் காரணமாகவே இவர் இமையமலை பயணம் என்று வருடம் ஒரு முறையாவது சென்று வருகின்றார், சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் வலிமை பெற்றால் மட்டுமே ஆன்மீக வெற்றி கிட்டும், இந்த ஜாதகருக்கு 12ம் பாவகம் கடகமாக வருவதால் ஆன்மீகத்தில் ஈடுபாட்டை தந்தது, ஆனால் 12ம் பாவகம் கடுமையாக பாதிக்க படுவதால் ஜாதகர் ஆன்மீக வாழ்க்கையில் வெற்றி பெற இயலவில்லை, ஆன்மீகம் என்ற பெயரில் இவர் அடிக்கும் கூத்து ( என்பது ) இதில் இருந்தே நமக்கு தெளிவாக தெரியும்.

சாதாரண மனிதன் உலக புகழ் பெறுவதிற்கு காரணம் சுய ஜாதகத்தில் உள்ள யோக நிலையும், அவரது கடின உழைப்பும் மட்டுமே காரணமாக இருக்க வாய்ப்பில்லை, பொதுமக்களின் ஆதரவும் அவர்களின் எண்ண ஆற்றலும் ஜாதகருக்கு கிடைக்கும் பொழுதே ஜாதகருக்கு அபரிவிதமான வெற்றியும் புகழின் உச்ச நிலைக்கு செல்லும் வாய்ப்பும் கிடைக்கிறது என்பதை ஜோதிடதீபம் இங்கு உறுதி பட தெரிவிக்கிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696