புதன், 19 நவம்பர், 2014

எண்கணிதம் ஒருவரின் வாழ்க்கையில் நடத்தும் மாயாஜாலங்கள் ! தொடர்ச்சி.....


இனி 2 வது உதாரண பிறந்த தேதியை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே :

தமிழகத்தை முதல்வரகளாக ஆட்சி செய்த மூன்று தலைவர்களின் பிறந்த தேதியை எடுத்து கொள்வோம், அதில் இரண்டாவதாக புரச்சி தலைவர் MGR அவர்களின் பிறந்த தேதி மற்றும் பலன்கள்  



புரட்சி தலைவர் எம்ஜிஆர் பிறந்த தேதி ( 17/01/1917 )
நமது எண்கணித முறைப்படி    8-1-9-9

பிறந்த தேதியில் 8ம் எண் வந்தது ஜாதகரை சிறு வயதிலேயே பல சிரமங்களுக்கு ஆளாக்கியது, வறுமையின் கோர பிடியில் சிக்கி ஜாதகர் சிறு வயது முதல் தனது 15வது வயது வரை பல சிரமங்களை எதிர்கொள்ளும் தன்மையை தந்தது, அடிப்படையில் ஜாதகரின் கல்வி வாழ்க்கையை கேள்விக்குறியானது, ஜாதகர் தனது பெற்றோர் வழியில் இருந்து பெரும் நன்மையில் சிறிதேனும் அனுபவிக்க இயலாத தன்மையை தந்தது, அவரது பெற்றோருக்கும் பல சிரமங்களை வாரி வழங்கியது, ஜாதகரின் முயற்சிகள் யாவும் மிகப்பெரிய தோல்விகளையே வழங்கியது, பால்ய பருவத்திலே பசியின் கொடுமையை உணர்ந்தவர் என்பதால் பின்னாளில் தனது வீட்டுக்கு வரும் எவரும் வெறும் வயிற்றுடன் செல்லக்கூடாது என்ற கொள்கையை வைத்திருந்தார், பொதுவாக 8ம் எண் ஒரு மனிதருக்கு உலக பிரபலத்தை தந்த போதிலும் சுய வாழ்க்கையில் பிரகாசிக்காத தன்மையை தந்துவிடுகிறது, ஊருக்கு உத்தமன் வீட்டிற்கு ஊதாரி என்ற பழமொழியை நினைவுகூர வைத்துவிடுகிறது, 8ம் எண்ணில் பிறந்த ஒவ்வொருவரின் உழைப்பும் மற்றவருக்கே பலன் தருகிறது சம்பந்தபட்டவருக்கு பெரிய நன்மைகளை தருவதில்லை, தலைவர் இறுதி வரை தனக்காக எதையும் எடுத்துக்கொள்ளவில்லை என்பதை நினைவு கூர்வது அவசியம், 8ம் எண்ணை சார்ந்தவர்கள் பல சிரமங்களை அனுபவித்த போதிலும் நேர்மை மாறாத குணம் அவர்களை புகழின் உச்சிக்கே எடுத்து செல்கிறது என்பதை மறுக்க இயலாது.

பிறந்த தேதியில் மாதத்தில் 1ம் எண் வந்தது ஜாதகரை இளம் வயதிலேயே சோர்வு அறியாத கடின உழைப்பாளியாக நிலைநிறுத்தியது, தான் எடுத்துக்கொண்ட கொள்கையிலும், லச்சியத்திலும் குறிக்கோளாக இருந்து வெற்றி கனியை பறிப்பதற்கு உண்டான ஆளுமையை தந்தது, இளம் வயதில் சிரமபட்ட போதிலும், 15 வருடங்களுக்கு பிறகு ஜாதகர் தனது 30வது வயது வரை சகல விஷயங்களிலும் தேர்ச்சியும், நுண்ணறிவையும் பெரும் யோகத்தை தந்தது, சூரியனுக்கு உரிய 1ம் எண் ஜாதகருக்கு 15 முதல் 30 வயது வரை தனி திறன்களை வளர்த்துகொள்ளும் வாய்ப்பையும், தடை பட்ட கல்வியை தனது சுய முயற்ச்சியின் மூலமே கற்றுகொள்ளும் யோகத்தை தந்து, ஜாதகருக்கு அரசியில், கலைத்துறை, பொதுமக்களின் ஆதரவு இதற்குண்டான அறிமுகங்களை வழங்கிய காலம் இதுவென்றால் அது மிகையில்லை, ஒரு சிறந்த புகழ் பெற்ற மனிதராக பரிணமிக்க அடிப்படை அடித்தளம் அமைந்த காலம் இதுவே, எனவே ஜாதகர் சகல விஷயங்களையும் கற்று தேர்ந்த காலம் இதுவென்றால் அது மிகையில்லை.

பிறந்த தேதியில் வருடத்தில் 9ம் எண் வந்தது ஜாதகரை படி படியாக வெற்றிபடிகளில் கால் வைக்கும் யோகத்தை தந்தது எனலாம், ஜாதகர் தனது 30 வது வயது முதல் 45 வது வயது வரை வெற்றி படிகட்டுகளில் ஏற ஆரம்பித்த காலம் என்றால் அது மிகையில், தொடர் வெற்றிகளை கொடுக்கும் எண்ணான 9ம் எண்ணில் பயணம் செய்த புரட்சி தலைவர் தனது தனிப்பட்ட திறன்களையும், நல்ல குணங்களையும் பொதுமக்களுக்கு கலை துறை மூலம்  பிரதிபலித்தார், மேலும் மக்களின் பேர்அன்பிற்கும், பெரும் மதிப்பிற்கும் உரியவர் என்ற நிலையான நம்பிக்கையை மக்கள் மனதில் பசுமரத்தில் பதித்த ஆணி போல் மக்களின் மனதில் உயர்ந்து நின்றார், 9ம் எண்ணான செவ்வாயின் ஆதிக்கம் மக்கள் மனதில் நிலையான கதாநாயகன் அந்தஸ்தை பெற்று தந்து, இவரின் முகம் பார்க்க மக்கள் ஏங்கி கிடந்தனர், இவரின் வார்த்தைக்கு தமிழகமே கட்டுபட்டது, இவர் பயணம் செய்த 9ம் எண் ( 30 முதல் 45 வயது வரை ) தனது துறையிலும் தனிப்பட்ட வாழ்கையிலும்  பிரகாசிக்க வைத்த காலம் இதுவென்றால் அது மிகையில்லை.

பிறந்த தேதியில் கூட்டு எண்ணாக மீண்டும் 9ம் எண் வந்ததே ஜாதகரின் அபரிவிதமான வெற்றிக்கும், பொருளாதார ரீதியான உச்சத்திற்கும் கொண்டு சென்றது, ஜாதகரின் 45 வயது முதல் வாழ்வின் இறுதி வரை தொடர் வெற்றிகளையே வாரி வழங்கியது, ஜாதகருக்கு பிறந்த எண்களில் வெற்றிகளை குவிக்கும்  9ம் எண் மீண்டும் வந்தது, கலைத்துறை, அரசியல், பொதுவாழ்க்கை ஆகிய அமைப்பில் உச்ச நிலையை பெற வைத்தது, ஜாதகருக்கு பிறந்த தேதியில் வந்த 8ம் எண் வறுமையின் உச்சத்தை பார்க்க வைத்தது, வருடம் மற்றும் கூட்டு எண்ணில் வந்த 9ம் எண்கள் ஜாதகரை வசதி வாய்ப்பு மற்றும் புகழின் உச்சத்தை பார்க்க வைத்தது, ஜாதகருடன் மோதிய பலரது வாழ்க்கை கேள்விக்குறியாக மாறியது, வெற்றி தேவதையின் பரிபூரண பிடியில் ஜாதகர் உலா வந்த காலம் இதுவென்றால் அது மிகையில்லை, ஜாதகரை புகழின் உச்சிக்கும் உலக அளவில் பிரபலம் பெரும் யோகத்தையும் தந்த காலம் இதுவே, ஜாதகர் கலை துறையில் பல வெற்றிகளை குவிக்கவும், அரசியலில் கொடிகட்டி பறக்கவும் மேற்கண்ட செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற 9ம் எண்ணே வழிவகுத்தது எனலாம், ஒருவரின் பிறந்த தேதியில் 9ம் எண் வருவது வெற்றிகரமான வாழ்க்கையை உறுதி செய்யும், பெயரும் 9ம் எண்ணில் அமைந்தது  ( MGR ) வெற்றியின் சதவிகிதத்தை 200% வாரி வழங்கியது என்பதை நாம் இதன் மூலம் தெளிவாக உணரலாம்.

அன்பர்களே ! எண்களின் வலிமை பலன் தருவது, அதன் ஆதிக்கத்தின் கிழ் பயணம் செய்யும் பொழுது மட்டுமே என்பதை உணர்வது அவசியம் ஒருவரின் பிறந்த தேதியில் இருக்கும் எண் மற்றும் கூட்டு எண் ஆகியவை மற்றுமே ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயம் செய்து விடாது நமது எண்கணித முறைப்படி பிறந்த தேதி, மாதம், வருடம் மற்றும் கூட்டு எண் ஆகியவை அனைத்தும் ஒருவரின் வாழ்க்கையில் அதன் ஆதிக்கத்தின் கிழ் பயணம் செய்யும் வயதுகளில் யோக அவயோக பலன்களை எண்களின் தன்மைக்கு ஏற்றார் போல் பலன் தரும், பொதுவாக இவரது பிறந்த தேதியை வைத்து பலன்களை நிர்ணயம் செய்யும் எண் கணித நிபுணர்கள் இவரது வெற்றிக்கு காரணம் 8ம் எண்ணாக வர்ணிப்பது உண்டு, உண்மை அதுவல்ல இவரது பிறந்த தேதியில் வருடம் மற்றும் கூட்டு எண்ணில் இருக்கும் 9ம் எண்ணுக்கே அந்த பெருமையெல்லாம் சாரும் என்பதை எண்கணித ஆர்வலர்கள் புரிந்துகொள்வது சிறப்பு, 8ம் எண் ஜாதகருக்கு கடமை,கண்ணியம்,கட்டுப்பாட்டுடன் நேர்மையையும் வழங்கியது என்பதை மறுக்க இயலாத போதிலும், இவரது புகழ் மிக்க வெற்றிகரமான வாழ்க்கையை நிர்ணயம் செய்தது நிலையான வெற்றிகளை வாரி வழங்கும் 9ம் எண் என்றால் அது மிகையில்ல அனபர்களே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 17 நவம்பர், 2014

ஏக திசை சந்திப்பும் திருமண வாழ்க்கையில் வரும் இன்னல்களும் !



  திருமண பொருத்தம் பார்ப்பதில் தற்பொழுது மிக பிரபலம் ஆகிக்கொண்டு இருக்கும் ஒரு வார்த்தை " ஏக திசை சந்திப்பு " அதாவது திருமண பொருத்தம் காண வரும் வது வரன் இருவரின் ஜாதகத்தை ஆய்வு செய்யும் ஜோதிடர்கள், வது வரனின் ஜாதகத்தில் நட்சத்திர பொருத்தம் 10 க்கு எத்தனை இருக்கின்றது என்பதை உறுதி செய்துகொண்டு, இருவருக்கு தற்பொழுது நடைபெறும் திசை ஒரே கிரகத்தின் திசையாக இருப்பின், இந்த ஜாதகங்கள் பொருந்தாது என்று கூறி தவிர்க்க சொல்கின்றனர், இதை கேட்ட உடன் ஜாதகம் காண வந்தவர்களும் பொருத்தம் இல்லை என்று நினைத்து, திருமண பேச்சை அத்துடன் விட்டு விடுகின்றனர், இதன் உண்மை நிலையை இன்றைய பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !


கிழ்கண்ட ஜாதகங்கள் இதற்க்கு முன் 3 ஜோதிடர்கள் ஆய்வு செய்து இருவருக்கும் ஒரே திசை நடைபெறுவதால் ( சுக்கிரன் திசை ) பொருத்தம் வராது என்று, வரனின் ஜாதகத்தில் 5ல் ராகு  இருப்பதால் புத்திர பாக்கியம் இருக்காது என்று காரணம் சொல்லி ஜாதகம் காண வந்தவர்களின் வயிற்றில் புளியைகரைத்து அனுப்பி விட்டனர், உண்மையில் இரு தரப்பினருக்கும் ஜாதக பொருத்தம் பார்க்கும் முன்பு வரை மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்துள்ளனர் வதுவுக்கும் வரணுக்கும் பிடித்து விட்டதால் திருமணத்தை நடத்திவிடலாம் என்று, ஜாதகம் பார்க்க போன இரு தரப்பினருக்கும் இந்த பதிலால் கிலியடித்து, திருமணத்தையே நிறுத்தி விடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர், இவர்களை எமது நண்பர் விபரம் சொல்லி நம்மிடம் அழைத்து வந்தார், வது வரனின் ஜாதகத்தை தெளிவாக ஆய்வு செய்து இரு தரப்பினருக்கும் விளக்கத்தை எடுத்து உரைத்து, ஜாதகத்தில் உள்ள உண்மை நிலையை தெளிவு படுத்தி திருமணம் நடத்தி வைத்தோம் அன்பர்களே !

ஜாதக ஆய்வு 

வரனின் ஜாதக நிலை :



வதுவின் ஜாதக நிலை :



மேற்கண்ட இரண்டு ஜாதகத்திலும் சுக்கிர திசை நடைமுறையில் இருக்கிறது, ஜோதிடர்கள் காரணமாக கூறியது இருவருக்கு ஒரே திசை நடைபெறுகிறது எனவே திருமணம் செய்ய கூடாது என்பது, இதற்க்கு ஜோதிடதீபம் கிழ்கண்ட வாறு  விளக்கம் தந்தது.

வரனின் ஜாதகத்தில் நடைபெறும் சுக்கிரன் திசை ( 30/03/2013 முதல் 30/03/2033 வரை )

 ஜாதகனுக்கு சுக்கிர திசை களத்திர ஸ்தானமான 7ம் வீடு , சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த யோகத்தை தந்துகொண்டு இருக்கிறது, ஜாதகருக்கு 7ம் வீடு தொடர்பு பெரும் நான்காம் பாவகம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் வீடாக அமைந்து சர நெருப்பு தத்துவ அமைப்பில் செயல்படுவதால், ஜாதகர் சுய கட்டுப்பாடு, தன்னம்பிக்கை, ஒழுக்கம், நேர்மையான குணம், செய்யும் தொழில் தனது செயல்பாடுகள் மூலம் வெற்றி பெற்று சுய உழைப்பின் மூலம் வண்டி வாகனம், சொத்து சுக சேர்க்கை, நினைத்ததை சாதிக்கும் வல்லமை, நல்ல உடல் நிலை மற்றும் மன நிலையை பெரும் யோகம், மற்றவர் போற்றும் அருங்குணங்கள், சமுதாய அந்தஸ்து மற்றும் ஏற்றமிகு பெருவாழ்வை குறுகிய காலத்தில் ( சரம் ) பெரும் யோகத்தை தரும்.

வதுவின் ஜாதகத்தில் நடைபெறும் சுக்கிரன் திசை ( 16/12/2002 முதல் 16/12/2022 வரை )

 ஜாதகிக்கு சுக்கிரன் திசை 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த யோகத்தையே தந்துகொண்டு இருக்கிறது, ஜாதகிக்கு 7ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீடாக அமைந்து சர மண் தத்துவ அமைப்பில் நடைபெறுவதால், ஜாதகி பொறுமையான குணமும், சிறந்த உடல் நலமும், மற்றவர் போற்றும் பெருந்தன்மையையும் கொண்டிருப்பார், தனது நிதானமான செய்கையினாலும், பெரியோர்களின் ஆசிர்வாதமும் பாராட்டுகளையும் பெறுவார், இதில் கவனிக்க தக்க விஷயம் எதுவெனில் ஜாதகியின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவத்திற்கு 10ம் வீடாகி ஜீவன ஸ்தானமான வருவது ஜாதகியை திருமணம் செய்துகொள்ளும் அன்பருக்கு! அளவில்லா ( சரம் ) தொழில் விருத்தியை வாரி வழங்கும், இதுவரை ஜீவனத்திர்க்கே சிரம பட்ட நபராக இருந்தாலும் சரி, இந்த வதுவை திருமணம் செய்த சில நாட்களிலேயே தொழில் ரீதியான அபிவிருத்தியை எதிர்பாரா வண்ணம் பெறுவார், அவரின் கௌரவமும் அந்தஸ்தும் சமுதாயத்தில் மேலோங்கும்.

மேற்கண்ட இருவரின் சுய ஜாதக ரீதியாக நடைபெறும் சுக்கிரன் திசை வரனின் ஜாதகத்தில் 4ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களையும், வதுவின் ஜாதகத்தில் 7ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களையும் வாரி வழங்குவது ஏக திசா சந்திப்பால் எவ்வித துன்பமும் நடைபெற வாய்ப்பில்லை, மேலும் இவர்கள் திருமணம் செய்துகொள்வதால் திருமண வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை வாரி வழங்கும் என்பது உறுதி, எனவே திருமண வாழ்க்கை மிகவும்  சிறப்பாக நடைபெற்று தம்பதியர் யோக வாழ்க்கையையே பெற்றார்கள் என்பது உறுதி செய்யபட்ட விஷயமாக இருக்கிறது அன்பர்களே !

இருவருக்கும் நடைபெறும் சுக்கிரன் திசை யோக பலன்களையே வழங்குவதால், ஏக திசை சந்திப்பு எப்படி தீமையை செய்யும் என்று ஜோதிடர்கள் நிர்ணயம் செய்தனர் என்பது எமக்கு புரியவில்லை, ஆக வதுவின் ஜாதகத்திலும், வரனின் ஜாதகத்திலும் நடைபெறும் சுக்கிரன் திசை எந்த பாவக பலனை தருகிறது என்று தெரியாத பொழுதே ஜோதிடர்களுக்கு இந்த குழப்பம் ஏற்ப்பட்டு இருக்கும், இருவருக்கும் நடைபெறும் சுக்கிரன் திசை வரனின் ஜாதகத்தில் 4ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களையும், வதுவின் ஜாதகத்தில் 7ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களை, தருகிறது என்று தெரிந்து இருந்தால் இவர்கள் ஜாதக பொருத்தம் இல்லை என்று ஏக திசை சந்திப்பை காரணம் காட்டி இருக்க வாய்ப்பில்லை அன்பர்களே ! இந்த மாதிரி குத்து மதிப்பாக தவறாக ஜாதக பலன் சொன்னால், இதற்க்கு உண்டான வினை பதிவு, ஜோதிடர்களின் சந்ததியை பாதிக்கும் என்பதும் ஜோதிடர்களையும் பாதிக்கும் என்பதும் ஏன் இவர்களுக்கு புரியாமல் போய்விடுகிறது, நாம் காணும் ஜாதக கணிதம் குறைந்த பட்சம் நம்மை நம்பி வருபவர்களுக்கு நன்மை செய்யாவிட்டலும் பரவாயில்லை, தீமை நடைபெறாமல் இருப்பது முக்கியமல்லவா அன்பர்களே !

பொதுவாக திருமண பொருத்தம் காண்பதில் வது வரன் ஜாதகத்தில் அடிப்படையாக கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக இருப்பது குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமுமே, இந்த இரண்டு பாவகமும் மிக வலிமையாக இருந்து நடைபெறும் திசை, எதிர்வரும் திசைகள் வலிமை பெற்ற பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால் நிச்சயம் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாகவே அமையும், இத்துடன் 5ம் பாவகமும் இருவரின் ஜாதகத்தில் வலிமை பெற்று அமையும் பொழுது, நிச்சயம் சிறந்த புத்திர பாக்கிய யோகத்தை வாரி வழங்கிவிடும்.

பொருத்தம் இல்லை என்பதற்கு ஜோதிடர்கள் சொன்ன மற்றொரு காரணாம், " 5ல் ராகு புத்திர பாக்கியம் இல்லை " ஒருவரது ஜாதகத்தில் ராகு நல்ல நிலையில் இருக்கிறாரா?  பாதிக்கபட்டு இருக்கிறாரா ? என்று ஆய்வு செயாமல், ராகு 5ல் அமர்ந்தால் புத்திர பாக்கியம் இல்லை என்று முடிவு செய்வது உண்மைக்கு புறம்பான ஒரு விஷயம் அல்லவா ? பொதுவாக ராகு 5ல் அமர்ந்து அந்த பாவகத்திர்க்கு அதிபதி சுக்கிரன்,குரு,வளர்பிறை சந்திரன், சூரியனுடன் சேராத புதன் ( சூரியனுக்கு 14 பாகைக்கு மேல் அமர்ந்த நிலை) ஆகியோர் பொறுப் ஏற்றால் புத்திர ஸ்தானமான 5ம் பாவகம் 100% வலிமை பெற்று விடும் ஜாதகருக்கு பிறக்கும் குழந்தைகள் யாவும் ஆண் குழந்தைகளாகவே இருக்கும், ( ஜாதகர் தனது பூர்வீகத்தில் ஜீவனம் செய்து வந்தால் ) ஆக மேற்கண்ட வரனின் ஜாதகத்தில் சுக்கிரன் வீடான ரிஷபத்தில் அமரும் ராகு பகவான் ஜாதகருக்கு சிறந்த ஆண்வாரிசை வழங்குகிறார் என்பது உறுதியாகிறது, ஜாதகத்தில் உண்மையான விஷயங்கள் இப்படி இருக்க, இப்படி உண்மைக்கு புறம்பான ஜாதக பலன்களை சொல்லும் ஜோதிடர்களை என்ன செய்வது ? நாம் தான் தலையில் அடித்துக்கொள்ளவேண்டும்.

மேற்கண்ட சரியான உண்மையான விளக்கத்தை இரு தரப்பிற்கும் தெளிவாக சொன்ன பின்னரே இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர், தற்பொழுது தம்பதியருக்கு சந்தான பாக்கியம் கிட்டியாதாக நம்முடன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர், வாழையடி வாழையாக அவர்களது குடும்பம் 16 வகை செல்வமும் பெற்று செழித்து ஓங்கட்டும், இந்த பெருமை எல்லாம் எனது குருவையே சாரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 14 நவம்பர், 2014

ஜாதகத்தில் 5ல் ராகு இருப்பதால் புத்திரபாக்கியம் இல்லை என்று ஜோதிடர்கள் சொல்கின்றனர் இது உண்மையா ?



அண்ணா எனது ஜாதகத்தில் 5ல் ராகு இருப்பதால் புத்திரபாக்கியம் இல்லை என்று ஜோதிடர்கள் சொல்கின்றனர் இது உண்மையா ? 

தம்பி பொதுவாக பாரம்பரிய முறையில் மேலோட்டமாக உனது ஜாதகத்தை பார்க்கும் பொழுது விருச்சிக லக்கினத்திற்கு, 5ம் வீடான மீனத்தில் ராகு அமர்ந்து இருப்பதை கருத்தில் கொண்டு 5ல் அமர்ந்த ராகு புத்திர பாக்கியத்தை  தாராது என்ற பொது கருத்தை ஜாதக பலனாக தங்களுக்கு ஜோதிடர்கள் கூறியிருக்க கூடும்,  மேலும் 5ல் ராகு என்றவுடன் புத்திர பாக்கியத்தை தராது என்று முடிவு செய்வது முற்றிலும் தவறான ஜாதக கணிதம், எப்பொழுதுமே ஒருவரின் ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்ளும் பொழுது லக்கினம் ஆரம்பிக்கும் பாகையின் அடிப்படையில் 12 பாவகங்களை நிர்ணயம் செய்து, எந்த எந்த பாவகத்தில் நவ கிரகங்கள் அமர்ந்து இருக்கின்றது என்பதை துல்லியமாக கணிதம் செய்து பலன் காண்பது, சரியான ஜாதக பலனை காண வழிவகுக்கும்.




 உனது ஜாதகத்தில் லக்கினம் விருச்சிக ராசியில் 16:42:29 பாகையில் ஆரம்பித்து, தனுசு ராசியில் 15:41:31 பாகையில் முடிவடைகிறது, அதாவது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் ராசியான விருச்சிகத்தில் 226:42:29 பாகையில் ஆரம்பித்து கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் ராசியான தனுசு ராசியில் 255:41:31 பாகையில் முடிவடைகிறது, ஆக உனது லக்கினம் விருச்சிகமாக இருந்தாலும் பாகை கணித அடிப்படையில் லக்கினமான முதல் பாவகம் விருச்சிக ராசியிலும், தனுசு ராசியிலும் வியாபித்து இருக்கிறது உனது லக்கினம் இரண்டு ராசிகளுடன் சம்பந்தம் பெறுகிறது.

ராகு 5ல் என்பது ஜோதிடர்களின் கணிப்பு என்பதால் உனது ஜாதகத்தில் 5ம் பாவக நிலையை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம், பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் உனக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியான மீனத்தில் 20:39:01 பாகையில் ஆரம்பித்து, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியான மேஷத்தில் 20:05:32 பாகையில் முடிவடைகிறது, ஆக உனது லக்கினத்திற்கு 5ம் பாவகம் மீனமாக இருந்தாலும் பாகை கணித அடிப்படையில் லக்கினத்திற்கு 5ம் பாவகம் மீன ராசியில் 350:39:01 பாகையில் ஆரம்பித்து, மேஷ ராசியில் 20:05:32 பாகையில் முடிவு பெறுகிறது.

மேற்கண்ட அமைப்பில் 5ம் பாவகம் வியாபித்து இருக்கும் 350:39:01 முதல் 20:05:32 வரையிலான 5ம் பாவகத்தில் ராகு அமர்ந்து இருகின்றார ? என்பதை கவனிக்கும் பொழுது ராகு தங்களது ஜாதகத்தில் மீனத்தில் 341:56:49 பாகையில் அமர்ந்து இருக்கிறார், தங்களுக்கு ஐந்தாம் பாவகம் மீனமாக இருந்த போதிலும், மீன ராசியில் உள்ள நான்காம் பாவகத்தில் அமர்ந்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது, தங்களின் 4ம் பாவகம் கும்பத்தில் 318:30:50 பாகையில் ஆரம்பித்து மீனத்தில் 350:39:01 பாகையில் முடிவடைகிறது, 4ம் பாவகத்திர்க்கு உற்பட்ட பாகைக்குள் ( 341:56:49 ) ராகு அமர்ந்து இருப்பதால் தங்களின் ஜாதகத்தில் ராகு பகவான் 4ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கிறார் என்பதே சரியான ஜோதிட பாவக கணிதம்.

தங்களின் ஜாதகத்தில் ராகு 5ல் உள்ளார் என்ற கணிப்பு முற்றிலும் தவறானது, உண்மையில் ஜாதக பாவக கணிதம் கொண்டு ஆய்வு செய்யும் பொழுது 4ம் பாவகத்திலேயே ராகு பகவான் அமர்ந்திருப்பது தெளிவாகிறது, எனவே தம்பி தாங்கள் ராகு 5ல் இருப்பதால் புத்திர பாக்கியம் இல்லை என்ற கவலையை விட்டு விடுங்கள் , மேலும் தங்களின் ஜாதகத்தில் 5ம் பாவகம் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையுடனே இருக்கிறது , எனவே தங்களுக்கு முதல் குழந்தையே ஆண் வாரிசாக அமையும் என்பதால், 5ல் ராகு புத்திர பாக்கியம் இல்லை என்று தவறாக கணித்த ஜோதிடர்களின் கருத்தை முற்றிலுமாக மறந்துவிடுங்கள்.

மேலும் தங்களின் 5ம் வீடு  தொடர்பு பெறுவது லாப ஸ்தானமான 11ம் பாவகம், இந்த லாப ஸ்தானம் தங்களுக்கு கன்னி மற்றும் துலாம் ராசியில் வியாபித்து இருக்கிறது , 11ம் பாவக வலிமையையும் 100% நல்ல நிலையில் இருப்பதால் , தங்களுக்கு பிறக்கும் ஆண் வாரிசு ஜாதக அமைப்பு தங்களுக்கு அதிர்ஷ்டத்தையும், தொழில் விருத்தியையும், பொதுமக்களின் ஏகோபித்த நல்லாதரவையும் வாரி வழங்கும், குறுகிய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்தை வாரி வழங்கும், மேலும் 11ம் பாவகம் உபய மண் தத்துவம், சர காற்று தத்துவம் என்ற அமைப்பில் இயங்குவதால், தங்களுக்கும் தங்களது வாரிசுக்கும் நல்ல உடல் நலத்தையும், சிறந்த அறிவு திறனையும் பரிபூர்ணமாக வாரி வழங்கும்.

குறிப்பு :

ஒருவரின் சுய ஜாதக அடிப்படையில் 5ம் பாவகத்திர்க்கு உற்பட்ட பாகைக்குள் ராகு அமர்ந்து 5ம் பாவகத்தை 100% பாதிப்பிற்கு உள்ளாக்கினால் மட்டுமே, ஜாதகருக்கு புத்திர பாக்கியம் ( ஆண் வாரிசு ) இல்லாமல் போகும், ஒருவேளை 5ம் பாவகத்தில் அமரும் ராகு பகவான் 5ம் பாவகத்தை 100% வலிமை  படுத்தினால், ஜாதகருக்கு ஆண் குழந்தைகளே அமையும், பெண் குழந்தை  கிடைக்காது, மேற்கண்ட அமைப்பை நிர்ணயம் செய்யும் பொழுது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 5ம் பாவக நிலையை கருத்தில் கொள்வது புத்திர பாக்கியத்தை பற்றிய தெளிவான விளக்கம் தர இயலும், ராகு 5ல் அமர்ந்தாலே புத்திர பாக்கியம் இல்லை என்று நிர்ணயம் செய்வது முற்றிலும் தவறான கருத்து  தம்பி.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


வியாழன், 13 நவம்பர், 2014

எண்கணிதம் ஒருவரின் வாழ்க்கையில் நடத்தும் மாயாஜாலங்கள் !



அன்பர்களே !

இந்த பதிவில் எண்கணிதம் பற்றியும், எண்களின் வலிமையை பற்றியும் சற்றே சிந்தனைக்கு எடுத்துகொள்வோம், ஒருவரின் வாழ்க்கையில் நன்மை தீமையை வாரி வழங்கும் தன்மை 0-9 வரை உள்ள எண்களுக்கு நிச்சயம் உண்டு, இதில் சுய ஜாதகத்தில் ராசி மற்றும் லக்கினத்திற்கும் எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லை, சுய ஜாதகத்தில் உள்ள நவகிரகங்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை ஜோதிடதீபம் அடிப்படையிலேயே தெளிவுபட தெரிவிக்கிறது, ஒருவரின் பிறந்த தேதியை மட்டும் அடிப்படையாக வைத்து எண்கணிதம் என்பதை சிந்தனைக்கு எடுத்துகொள்ளுங்கள், எண்கணிதம் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் பிறந்த தேதி, மாதம், வருடம் மற்றும் கூட்டு எண் ஆகிய எண்களின் அடிப்படையிலேயே இங்கே விவாதிக்க படுகிறது, ஜாதகத்திற்கும் எண் கணிதத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை முதலிலேயே ஜோதிடதீபம் தங்களுக்கு அறிவுறுத்துகிறது, இனி வரும் விஷயங்கள் யாவும் ( 0 முதல் 9 வரையிலான ) எண்களின் அடிப்படையிலேயே இருக்கும் அன்பர்களே ! 

அடிப்படையில் ஒருவரின் பிறந்த தேதியில் 2,7,8 ம் எண்கள் இருப்பின் குறிப்பிட்ட நபர் மேற்கண்ட எண்களின் ஆதிக்கத்தின் கிழ் பயணிக்கும் குறிப்பிட்ட காலம் வரை மிகுந்த இன்னல்களுக்கும் தொந்தரவுகளுக்கும் ஆட்படும் சூழ்நிலையை தரும், மேற்கண்ட எண்களுக்கு அருகில் இருக்கும் எண்கள் இந்த எண்களுக்கு நட்பு நிலையில் இருப்பின், இந்த எண்களின் பாதிப்பு குறையும், ஒரு வேலை இந்த எங்களுக்கு பகை நிலையில் இருப்பின் பாதிப்பின் தன்மை மிக அதிகமாக இருக்கும். எனவே ஒருவரின் பிறந்த தேதியில் ( தேதி,மாதம்,வருடம் மற்றும் இவற்றின் கூட்டு எண் ) ஆகியவற்றில் மேற்கண்ட எண்கள் இல்லாமல் இருப்பின் சம்பந்தபட்டவர் வாழ்க்கையில் பெரிய அளவில் சிரமங்களை எதிர்கொள்ளாமல் சிறப்பான முன்னேற்றங்களை தனது வாழ்க்கையில் பெறுவார் என்பதுமட்டும் நிதர்சனமான உண்மை அன்பர்களே !

இனி உதாரண பிறந்த தேதியை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே :

தமிழகத்தை முதல்வரகளாக ஆட்சி செய்த மூன்று தலைவர்களின் பிறந்த தேதியை எடுத்து கொள்வோம் 

1) கலைஞர் கருணாநிதி 
2) புரட்சி தலைவர் எம்ஜிஆர் 
3) புரட்சி தலைவி ஜெயலலிதா 

கலைஞர் கருணாநிதி பிறந்த தேதி ( 03/06/1924 ) 
நமது எண்கணித முறைப்படி    3-6-7-7

புரட்சி தலைவர் எம்ஜிஆர் பிறந்த தேதி ( 17/01/1917 )
நமது எண்கணித முறைப்படி    8-1-9-9

புரட்சி தலைவி ஜெயலலிதா பிறந்த தேதி ( 24/02/1948 )
நமது எண்கணித முறைப்படி   6-2-4-3


கலைஞர் கருணாநிதி பிறந்த தேதி ( 03/09/1924 ) 
நமது எண்கணித முறைப்படி    3-6-7-7



பிறந்த தேதியில் 3ம் எண் வந்தது அதிபுத்திசாலிதனமான செய்கையினால் வெற்றிவாய்ப்புகளை  பெரும் யோகத்தை தந்தது, பிடிவாத குணத்தால் சில விஷயங்களை  சாதிக்கும் வல்லமையை தந்து, தனது பேச்சு மற்றும் எழுத்தின் மூலம் மக்களிடம் பிரபலம் ஆகும் வாய்ப்பை 3ம் எண்ணே வாரி வழங்கியது , இவர் சொல்லும் வார்த்தைக்கும், எழுத்து நடைக்கும் தனி ரசிகர் பட்டாளமே  இருந்தது, மொழி புலமையும் வாக்கு வன்மையும் எழுத்து நடையும் தனிப்பட்ட அடையாளத்தை தமிழகத்தில் பெற்று தந்து, 3ம் எண் இவரின் பிறப்பில் இருந்து முதல் 15 வருடங்களை தனது ஆளுமைக்கு கொண்டு வந்து அடித்தளத்தை அமைத்து தந்து .

பிறந்த தேதியில் மாதத்தில் 6ம் எண் வந்தது சில எதிர்பாராத வெற்றிவாய்ப்புகளை வாரி  வழங்கியது, பெரிய மனிதர்களின் ஆதரவும் ஆசிகளும் சிறப்பாக அமைந்து வெளி உலகத்திற்கு இவரின் செயல்கள் மற்றும் சேவைகள்  தெரிய ஆரம்பித்தது, இந்த நேரத்தில் தான் ஏற்றுகொண்ட துறையில்  பிரகாசிக்கும் வெற்றி வாய்ப்பை வாரி வழங்கியது, கற்பனை  வளமும் எழுத்தின் வல்லமையும் தமிழக மக்களுக்கு இடையே நல்ல வரவேற்ப்பை  பெற்று தந்தது, வெற்றிகரமான முன்னேற்ற வாழ்க்கையை இவரின் 15 வது வயது முதல் 30 வது வயது வரை 9ம் எண் ஸ்திரமாக நிர்ணயம் செய்து  வெற்றிகளை வாரி குவித்தது சிறந்த அறிமுகம் கிடைத்தது.

பிறந்த தேதியில் வருடத்தில் 7ம் எண் வந்தது பொதுமக்களிடம் பிரபலமாக்கியது ,  பொதுமக்களின் நன்மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய நபராக வலம் வர செய்தது, இந்த காலகட்டத்தில் அரசியல் ரீதியான செல்வாக்கும் அரசியல் ஆதாயமும் எதிர்பாராத வகையில் அமைந்த போதிலும், சுய வாழ்க்கையில் பல முரண்பட்ட விஷயங்களில் ஈடுபட வைத்தது இவரின் எதிர்மறையான செய்கைகளும் மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது, பொது வாழ்க்கையில் பிரகாசித்த அளவிற்கு தனிப்பட்ட வாழ்க்கை  சிறப்பாக அமையவில்லை, எதிர்மறையான கருத்துக்களும் இவருக்கு பிரபலமான அரசியல் வாழ்க்கையை தந்தது, இவரின் 30 வது வயது முதல் 45 வது வயது வரை 7ம் எண் பிரபலமான மனிதர் என்ற பெயரையும், பொருளாதார ரீதியான அபரிவிதமான் வளர்ச்சியின் ஆரம்பத்தையும் தந்து.

பிறந்த தேதியில் வரும் கூட்டு எண் 7ம் எண்  வந்தது நீண்ட ஆயுளை வாரி வழங்கியது, முதுமை வயதிலும் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் மிக சிறப்பாக அமைந்தது, தமிழகத்தில் மட்டும் பிரபலமாக இருந்த இவருக்கு இந்தியா முழுவதும் செல்வாக்கு கிடைத்த காலம் இதுவே எனலாம், 8ம் எண்ணுடன் மோதி தனது வலிமையை இழந்த காலம் இதுவே என்றால் அது  மிகையில்லை, இவரது பிறந்த தேதியில் உள்ள 3ம் எண்  இவரது கட்சியில் இருந்த 8ம் எண் கொண்ட அன்பருடன் மோதல் போக்கை கடைபிடிதததால், அவர்  வழியில் இருந்து மிகப்பெரிய இழப்புகளை சந்திக்கும் சூழ்நிலையை தந்தது, இருப்பினும் தொடர்ந்து வல்லமையுடன் போராடும் குணத்தை தந்தது, இந்த போராட்ட குணம் பின்னாளில் நல்ல பலனை தந்தது எனலாம், இவரின் 45 வது வயது முதல் தற்பொழுது உள்ள காலம் வரை 7ம் எண் தனது ஆளுமைக்கு  கிழ் கொண்டு வந்து வெற்றி தோல்வி பலன்களை மாறி மாறி தந்துகொண்டே இருக்கிறது, பல சாதனைகளுக்கு சொந்தக்காராக இன்னும் மக்கள் சேவை செய்யும் யோகத்தை தந்துகொண்டு இருப்பது 7ம் எண்ணின் வலிமையே என்றால் அது மிகையில்லை .

தொடரும்........

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - சிம்மம்



சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   


ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.

அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது .


சிம்ம லக்கினம் :

சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் அமர்ந்த சனிபகவான் சிம்ம இலக்கின ஜாதகருக்கு சுக ஸ்தான அமைப்பில் இருந்து திடீர் என வீடு வாங்கும் யோகம், வீடு கட்டும் யோகம், புதிய சொகுசு வாகனம் வாங்கும் யோகம், கூட்டு முயற்சியாக பல தொழில்களில் முதலீடு செய்யும் அமைப்பு, வாழ்க்கை துணை வழியில் இருந்து  கிடைக்கும் எதிர்பாராத பொருளாதார உதவிகள், வெளியூர் பயணங்களால் ஜாதகருக்கு கிடைக்கும் யோக அமைப்புகள், ஆன்மீக பெரியவர்கள் மூலம் ஜாதகருக்கு திடீர் என கிடைக்கும் நல்லாசிகள் , போதும் என்ற மனம், விவாசாயத்தில் எதிர்பாராத நல்ல லாபம்,  வண்டிவாகன தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றம் உண்டாகும், கலைத்துறையில் உள்ளவர்கள் மிகப்பெரிய அதிர்ஷ்ட வாழ்க்கை பெறுவார்கள் இதுவரை உழைத்த உழைப்பிற்கு இனிவரும் காலங்கள் சிறந்த  நன்மைகளை  ஸ்திரமாக தொடர்ந்து வழங்கும் என்பதால் இந்த சனி பெயர்ச்சி, சிம்ம இலக்கின ஜாதகர்களுக்கு 4ம் பாவக வழியில் இருந்து 100%  யோகத்தையே வாரி வழங்கும்.

6ம் பார்வையாக பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகத்தை பார்வை செய்யும் சனி பகவான் பொது காரியங்களில் ஈடுபடும் அன்பர்களுக்கு மிகப்பெரிய சோதனைகளை தருவார், மற்றவர்களின் விஷயங்களில் தேவையில்லாமல் தலையீடு செய்தால் , ஜாதகருக்கு வீண் அவபெயரும் மனோரீதியான போராட்டங்களையும்  எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், மற்றவருக்கு ஜாமீன் தருவது , மற்றவருக்காக பொறுப்பை ஏற்று கொள்வது போன்றவை மிக பெரிய  துன்பங்களை வாரி வழங்கும், எந்த காரணத்தை கொண்டு எதிர்பால் அமைப்பினரிடம் எச்சரிக்கையாக நடந்துகொள்ளவேண்டிய காலம் இது ஏனெனில் ஆண் என்றால் பெண்களாலும், பெண் என்றால் ஆண்களாலும் தேவையில்லாத வீண் அவபெயரை சந்திக்கும் சூழ்நிலையை தரும், இதனால் தங்களின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்ப்பட அதிக வாய்ப்பு உண்டு அன்பர்களே, இது ஒரு வகையில் சிரமங்களை தந்த போதிலும் ஜாதகர் பல திரு தளங்களுக்கு சென்றுவரும் யோகம் உண்டாகும், சிறந்த ஆன்மீக பெரியோர் மற்றும் சமுதாய  பெரிய மனிதர்களின் ஆசிர்வாதமும், ஜாதகருக்கு பரிபூரணமாக் கிடைக்கும், எவ்வளவு துன்பம் வந்த போதிலும் ஜாதகருக்கு இறுதியில் நன்மையே உண்டாகும்.

7ம் பார்வையாக ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகத்தை பார்வை செய்யும் சனிபகவான் சிம்ம இலக்கின ஜாதகர்களுக்கு தொழில் ரீதியான வெற்றிகளை 100% வாரி வழங்குகின்றார், ஜாதகருக்கு வருமான வாய்ப்புகள் தொடர்ந்து  வந்தவண்ணம் இருக்கும் என்பதால் இது சிம்மலக்கினத்தருக்கு வருமான வாய்ப்பையும், தொழில் முன்னேற்றத்தையும் வாரி வழங்கும்,  சமுதாயத்தில்  கௌரவம் மற்றும் அந்தஸ்து சுய மரியாதை ஓங்கி நிற்கும், ஜாதகரின் புகழும் கீர்த்தியும் உலகம் முழுவதும் பிரபலமாகும், பொது மக்களை சார்ந்து தொழில் செய்துவரும்  சிம்ம இலக்கின அன்பர்களுக்கு அபரிவிதமான யோகங்களை வாரி வழங்கும், பொதுமக்கள் வழியில் இருந்து நல்ல வருமானத்தையும், நீடித்த ஆதரவையும் வாரி வழங்கும், ஜாதகரின் பேச்சு திறமையும், வாக்கு வன்மையும் பிரகாசிக்கும், நிதி நிறுவனம் அல்லது பணம் சார்ந்த தொழில்களை  செய்துவரும் அன்பர்களுக்கு இது ஒரு அபரிவிதமான வருமானத்தை வாரி வழங்கும் யோக காலம், இதுவரை திருமணம் ஆகாமல் தடைபெற்று  வந்த சிம்ம இலக்கின அன்பர்களுக்கு திடீரென குறுகிய காலத்தில்  திருமணம் நடைபெறும், சிறந்த குடும்ப வாழ்க்கை அமையும் என்பது  கவனிக்கத்தக்கது, சிம்ம இலக்கின அன்பர்களுக்கு இனிவரும் இரண்டரை வருடம்  சனிபகவான் மிகுந்த யோகத்தை ஜீவன வழியில் இருந்து வாரி வழங்குகிறார் என்பதால் சிம்ம இலக்கின அன்பர்கள் விழிப்புணர்வுடன் இருந்து தமக்கு வரும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேற்றம் பெற ஜோதிடதீபம் வாழ்த்துகிறது.

10ம் பார்வையாக லக்கினத்தை பார்வை செய்யும் சனிபகவான், சிம்ம இலக்கின அன்பர்களுக்கு சிறந்த உடல் நலத்தையும், மன ஆரோக்கியத்தையும், அறிவில் தெளிவையும் தரும் காலம் இது, தனது சுய அறிவை கொண்டு, சாதுர்யமான செயல்களால் பல சாதனைகளை செய்யும் வாய்ப்பை தருவார் சனிபகவான் என்றால் அது மிகையில்லை, ஜாதகர் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் எவ்வித தடையும் இன்றி குறுகிய காலத்தில் சிறந்த வெற்றிகளை பெரும் யோகத்தை தரும், ஜாதகரின் சுய அறிவு திறன் பிரகாசிக்கும் யோக காலமாக இதை கருதலாம் அன்பர்களே !  உயர்கல்வி ரீதியாக ஜாதகர் எடுக்கும் முயற்சிகள் யாவும் நல்ல முன்னேற்றத்தையும் வெற்றியையும் தரும், கலைத்துறையில் இருக்கும் அன்பர்களுக்கு இனிவரும் இரண்டரை வருடம் மிகப்பெரிய முன்னேற்றங்களை வாரி வழங்கும், புகழ் மிக்க பொறுப்புகளை ஜாதகர் ஏற்று நடத்தும் யோகம் உண்டாகும், குறுகிய வட்டத்தில் இருந்த அன்பர்களுக்கு இனிவரும் காலம்  உலகபிரசித்தியை பெற்றுத்தரும், உலக அளவில் சிம்ம லக்கினத்தை சார்ந்தவர்கள் பிரகாசிக்கும் யோக காலம் இது என்பதால், சிம்மலக்கினத்தை சார்ந்த அன்பர்கள் தனது தகுதிகளையும் திறமைகளையும் உலக அளவில் அறிமுகம் செய்து வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளை பெறுங்கள் வாழ்த்துகள் .

 சிம்ம இலக்கின அன்பர்களே! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை மற்றும் புத்தி மேற்கண்ட1,4,9,10ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே தங்களுக்கு மேற்கண்ட  சனிபகவானின் கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை 1,4,9,10ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க, வாழ்த்துக்கள் 


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 11 நவம்பர், 2014

சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - கடகம்



சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   


ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.

அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது .


கடக லக்கினம் :

5ல் அமர்ந்த சனி பகவான் ஜாதகருக்கு நினைவாற்றலையும், சிந்தனை திறனையும் வெகுவாக குறைப்பார், ஞாபக மறதியால் திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது , வெளிநாடுகளில் இருப்பவர்கள் முதலீடுகளை செய்யும் பொழுது அதிக கவனமுடன் இருப்பது நலம், மற்றவருக்கு பண உதவிகள் செய்யும் பொழுது  உண்மை காரணத்தை அறிந்து செய்யுங்கள், இல்லை எனில் தேவையில்லாத மன உளச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், தன்னம்பிக்கை வெகுவாக குறையும் காலம் இதுவென்பதால் ஜாதகர் தனது பிரச்சனைகளுக்கு தானே தீர்வுகளை தேடிகொள்வது சால சிறந்தது, முன் பின் யோசனை செய்யாமல் எடுக்கும் எந்த ஒரு காரியமும் எதிர்பாராத தடைகளை சந்திக்கும் என்பதால், நன்கு ஆலோசனை செய்து செயல்படுவது மிகுந்த யோகத்தை  தரும், இனிவரும் காலங்களில் ஜாதகர் மனோ ரீதியான பிரச்சனைகளை சந்திக்கும் சூழ்நிலைகளை அதிகம் தருவதால், தன்னம்பிக்கையை வளர்த்துகொள்வது நல்லது, அல்லது நல்ல ஆன்மீக பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவதும், தனது தாய் தந்தையின் மனம் நோகமால்  நடந்துகொள்வது சிறந்த நன்மைகளை வாரி வழங்கும்.

6ம் பார்வையாக ஜீவன ஸ்தானத்தை பார்வை செய்யும் சனிபகவான், ஜாதகருக்கு தொழில் ரீதியான முன்னேற்றத்தை அபரிவிதமாக வாரி வழங்குகிறார், இதுவரை மந்த நிலையில் சென்று கொண்டு இருந்த தொழில் இனி காட்டு தீ போல் வெகு வேகமாக முன்னேற்றத்தை தரும், குறிப்பாக தினம் தினம் அழியும் தன்மை கொண்ட உணவு பொருட்களை, வியாபாரமாக செய்பவர்களுக்கு இது ஒரு பொற்காலம், மேலும் விவசாயம், விவசாய உற்பத்தி பொருட்களை சந்தைபடுத்தும் தொழில்களில் உள்ளவர்களுக்கு இது  ஒரு வருமான வாய்ப்பை வழங்கும் பொற்காலம், அரசு துறை வேலையை எத்திர்பார்த்து  இருப்பவர்களுக்கு திடீரென வேலைவாய்ப்பு கிடைக்கும், அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு திடீரென பதவி உயர்வு உண்டாகும், ராணுவம் மற்றும் காவல் துறையில் பணிபுரியும் அன்பர்களுக்கு இனிவரும் காலங்களில் அபரிவிதமான முன்னேற்றம் உண்டாகும், சுய தொழில் செய்வோருக்கு இனி வரும் இரண்டரை வருடங்கள் மிகப்பெரிய முன்னேற்றத்தையும், பொருளாதார ரீதியான தன்னிறைவையும் வாரி வழங்கும் .

7ம் பார்வையாக லாப ஸ்தானத்தை பார்வை செய்யும் சனிபகவான், ஜாதகருக்கு அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டே சகல அதிர்ஷ்டங்களையும் பெரும் யோகத்தை  தருகிறார், நேற்றுவரை சாமானியராக இருந்தவர்கள் இன்றுமுதல் அதிர்ஷ்ட தேவதையில் அருளை பெற்றவர்கள் ஆகிறார்கள், வருமான வாய்ப்பு ஜாதகரின் வாயிற்க் கதவை வழிய வந்து தட்டும், குறிப்பாக வட்டி தொழில் நகை வீடு அடமான கடன் தொழில் செய்பவர்களுக்கு இது ஏற்றமிகு யோக காலம்,  குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும், ஜாதகரின் பேச்சுக்கு நல்ல மதிப்பு இருக்கும், ஜாதகரின் கட்டளைக்கு அனைவரும் அடிபணிந்து நடக்கும் யோகத்தை தரும், தனது சுய உழைப்பால் வீடு வண்டி வாகனம் வாங்கும் யோகத்தை தரும், முற்போக்கு சிந்தனையுடன் ஜாதகர் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெரும் , தனது வாத திறமையால் அனைத்தையும் சாதிக்கும் வல்லமையை தரும்.

10ம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தை பார்வை செய்யும் சனிபகவான், ஜாதகருக்கு குடும்பத்தில் சிறு சிறு சிரமங்களை தந்த போதிலும், வருமான வாய்ப்பை குறைக்க மாட்டார், ஜாதகர் தனது குல தெய்வத்தை நாடி வழிபாடு செய்வதால் சகல நலன்களும் பெறுவார், தனக்கு வரும் வருமானத்தை தேவையில்லாத செலவுகளை செய்து வீண் விரயம் செயாமல் இருப்பது  நலம் தரும், குடும்ப நலனை கருத்தில் கொண்டு செயல்படுவது சால சிறந்தது, உதாரணமாக குடும்பத்தில் உள்ள அனைவரது உடல் நலனிலும் அதிக அக்கறை கொள்வது நலம் தரும், அதே போன்று தங்களின் உடல் நலனினிலும் கவனமாக இருப்பது நலம், குறிப்பாக வயிறு சார்ந்த தொந்தரவுகள் அதிகரிக்க கூடும், உணவு பழக்க வழக்கங்களில் அதிக கவனமாக இருப்பது நலம் தரும், ஜாதகர் தனக்கு வரும் வருமானத்தை சேமிக்கவும், திட்டமிட்டு செலவு செய்ய வேண்டிய கட்டாயம் இனி வரும் இரண்டரை வருடகாலம் தரும்.

கடக இலக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை மற்றும் புத்தி மேற்கண்ட2,5,10,11ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே தங்களுக்கு மேற்கண்ட  சனிபகவானின் கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை 2,5,10,11ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க, வாழ்த்துகள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 10 நவம்பர், 2014

சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - மிதுனம்



சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   


ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.

அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது .

மிதுன லக்கினம் :

மிதுன லக்கினத்திற்கு 6ல் அமர்ந்த சனிபகவான் விபரீத ராஜ யோக பலன்களை வாரி வழங்க இருக்கிறார், உடல் ரீதியான சில பிரச்சனைகளால் பாதிக்க பட்டு இருந்த அன்பர்களுக்கு தற்பொழுது அதில் இருந்து குணம் பெரும் யோகத்தை தருகிறார், சிறு முதலீடுகளில் இருந்து எதிர்பாராத பெரிய தன வரவை பெரும் யோக காலமாக இந்த இரண்டரை வருட காலத்தை கருதலாம், மேலும் வெளிநாடுகளில் இருந்து திடீர் தனவரவை பெரும் யோகமும், புதிய பொருட்கள் வாங்கும் யோகமும், புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம், எதிர்பாராத புதிய உறவுகளின் ஆதரவு, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும்  மனமகிழ்வு மற்றும் பொருளாதார உதவிகள், புதிய தொழில் துவங்கும் யோகம், மக்கள் தொடர்புள்ள தொழில்களில் இருப்பவர்களுக்கு அபரிவிதமான தொழில் முன்னேற்றத்தை வாரி வழங்கும்  யோக காலமாக மிதுன  லக்கினத்தை சார்ந்தவர்கள் இந்த சனி பெயர்ச்சி இருக்கும்  என்பதை மறுப்பதற்கு இல்லை.

மிதுன லக்கினத்திற்கு 6ம் பார்வையாக 11ம் பாவகத்தை பார்வை செய்யும் சனி பகவான் ஜாதகருக்கு மிகுந்த அதிர்ஷ்ட வாய்ப்புகளை வாரி வழங்குகிறார், குறிப்பாக ஜாதகரின் செயல்பாடுகளும் , முயற்சிகளும் எளிதில் வெற்றி பெரும் யோக காலம் இது, ஜாதகரின் உடல் நலம் மற்றும் மன நலம் மிகவும் சிறப்பாக இருக்கும், நீடித்த அதிர்ஷ்டத்தை தொடர்ந்து வழங்கிய வண்ணம் சனிபகவான் இருப்பார், ஜாதகரின் சுறுசுறுப்பான செயல்கள் யாவும் புதிய வாய்ப்புகளை  வாரி வழங்கும், மேஷம் சர நெருப்பு தத்துவ அமைப்பில் செயல்படுவதால், ஜாதகருக்கு தரவேண்டிய யோக பலன்கள் யாவும் வெகு விரைவாக  குறுகிய காலத்தில் கிடைக்கும், ஜாதகரின் நம்பிக்கைகள் யாவும் அபரிவிதமான வெற்றியை பெரும் யோக காலம் இது, ஜாதகர் எந்த ஒரு   காரியத்திலும் மன உறுதியாக செயல்பட்டு பல சாதனைகளையும், அதிர்ஷ்டங்களையும், பெரும் யோக காலம் இதுவென்றால் அது மிகையில்.

மிதுனலக்கினத்திற்கு 7ம் பார்வையாக 12ம் பாவகத்தை பார்வை செய்யும் சனிபகவான் திருமணம் ஆகாத  மிதுன லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு உடனடியாக திருமண வாழ்க்கையை அமைத்து தருவர், இதுவரை வருமான வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அன்பர்களுக்கு நிலையான நீடித்த வருமான வாய்ப்பை தொழில் மூலமாக வாரி வழங்குவார், ஜாதகரின் பேச்சு திறமையும், தீர்க்கமான வாதமும் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்று தரும், ஜாதகரின் குடும்ப வாழ்க்கையில்  மகிழ்ச்சி பொங்கும், முதலீடு செய்த அமைப்பில் இருந்து எதிர்பாராத  தன வரவை பெறுவார்கள், வட்டி தொழில் மிகுந்த லாபத்தை தரும், ஜாதகரின் பண தேவைகள் யாவும் இனி வரும் காலங்களில் பூர்த்தியாகும், சிலருக்கு புதியதாக வீடு கட்டும் யோகம் அல்லது வாங்கும் யோகம் உண்டாகும், பல தொழில் செய்யும் யோகமும் பல வகையான வருமான வாய்ப்புகளும் மிதுன லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு பொருளாதார ரீதியான தன்னிறைவையும், மன நிம்மதியான குடும்ப வாழ்க்கையையும் வாரி வழங்கும்.

மிதுன லக்கினத்திற்கு 10ம் பார்வையாக 3ம் பாவகத்தை பார்வை செய்யும் சனிபகவான் திருமணம் ஆனா தம்பதியருக்கு உடனடியாக புத்திர சந்தான பாக்கியத்தை வாரி வழங்குகிறார், தனது குலம் செழிக்க நல்ல வாரிசு அமையும், குழந்தை பிறந்த நேரம் அனைவருக்கும் யோக காலத்தை வாரி வழங்கும், தற்பொழுது நடைபெற்ற  சனிபெயர்ச்சி மிதுன லக்கினத்தாருக்கு ஏஜென்சி துறையில் புகழ்பெற்ற வெற்றி வாய்ப்ப்களை வாரி வழங்கும், தன்னம்பிக்கையுடன் உழைத்து வாழ்க்கையில் குறுகிய காலத்தில் நல்ல அந்தஸ்தை நிலையாக பெரும் யோகத்தை தரும், ஜாதகரின் அறிவாற்றலும் சிந்தனைகளும் நீடித்த நன்மைகளை வாரி வழங்கும், ஜாதகர் எங்கு சென்றாலும் நல்ல வரவேற்ப்பையும்,சமூக  கௌரவம் மரியாதையை பெரும் யோகத்தை தரும், புதிய பதவிகளை அலங்கரிக்கும் யோகத்தை தரும், அரசியல் ரீதியான வெற்றிகள், மக்கள் ஆதரவை பெற்று தரும் யோக காலமாக இதை  கருதலாம்.

மிதுன இலக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை மற்றும் புத்தி மேற்கண்ட3,6,11,12ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே தங்களுக்கு மேற்கண்ட  சனிபகவானின் கோட்சார நன்மைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை 3,6,11,12ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க, வாழ்த்துகள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


ஞாயிறு, 9 நவம்பர், 2014

எழரைச் சனி, அஷ்டமத்து சனி, அர்தாஷ்டம சனியின் பாதிப்புகள் !



வணக்கம் அய்யா !

ஒவ்வொரு ராசிக்கும் சனி பெயர்ச்சி பலன்கள் பற்றி, பல ஜோதிடர்கள்  புத்தகம் எழுதியுள்ளனர். எழரைச் சனி, அஷ்டமத்து சனி, அர்தாஷ்டம சனியின் பாதிப்புகள், பற்றி தங்களின் கருத்து என்ன ?


வணக்கம் அன்பரே !

அடிப்படையில் ஜோதிடதீபம் தங்களுக்கு ஒரு சிறு விளக்கத்தை தர விரும்புகிறது, பொதுவாக பாரம்பரிய ரீதியாக ஜாதக பலன் காணும் ஜோதிடர்கள் அனைவரும், ராசிகளுக்கு கோட்சார கிரகங்களை தொடர்பு படுத்தி பலன் சொல்வார்கள் ( குறிப்பாக சனி, குரு, ராகு கேது ) இது எந்த அளவிற்கு உண்மை என்பது அவர்களுக்கே வெளிச்சம், பொதுவாக ஒருவரின் சுய ஜாதகத்திற்கு பலன் காண வேண்டுமெனில் அந்த ஜாதகரின் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடத்தின் அடிப்படையில் கணிக்தம் செய்து ஜாதகரின் லக்கினம் என்ன? என்பது முதலில் நமக்கு தெரிய வேண்டும், இரண்டாவதாக ஜாதகருக்கு லக்கினத்தின் அடிப்படையில் 12 பாவக நிலைகளை பற்றிய தெளிவு வேண்டும், மூன்றாவதாக தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம், சூட்சமம் 12 பாவகங்களில் எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது?  தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம், சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு கோட்சார கிரகங்கள் எவ்வித பலன்களை தருகிறது? என்ற விஷயம் தெரிந்தால் மட்டுமே அந்த ஜாதகருக்கு நாம் சரியான ஜாதக பலன்களை தெளிவாக மற்றும் துல்லியமாக கணிதம் செய்து சொல்ல இயலும் அன்பரே!

சந்திரன் நின்ற அமைப்பை வைத்து ( அதாவது ராசி பலன் ) ஒரு ஜாதகருக்கு பலன் சொல்வது என்பது ஏற்புடையதாக இருக்கும் என்று ஜோதிடதீபம் கருதவில்லை, ஏனெனில் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம், சூட்சமம் ஆகியவை எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்ற விஷயம் தெரியாத பொழுதே மேற்கண்ட ( ராசிகளுக்கு சனி பெயர்ச்சி பலன் காணும் ) குழப்பம் ஏற்படும், மேலும் ராசிகளுக்கு கோட்சார பலன் காணும் முறை வெகு காலமாக இருந்து வருகிறது, அந்த காலத்தில் சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே ஜாதகம் இருந்தது, பல நபர்களுக்கு பிறந்த நேரம் என்ற ஒரு விஷயமே தெரியாது, ஏன் சிலருக்கு பிறந்த தேதி என்ன ? என்பது கூட தெரியாது, இதை தங்களின் பெற்றோரை விசாரித்தலே தெரிந்துவிடும்.

எனவே ஜாதகம் இல்லாத நபர்கள் ஜோதிடரிடம், தமக்கு இனி என்ன பலன்கள் நடைபெறும் என்று கேள்வியை முன்வைக்கும் பொழுது, ஜோதிடர் அவரின் பெயரின் முதல் எழுத்தை கொண்டு நட்சத்திரம் அறிந்து அதற்க்கு உண்டான ராசியை தெரிந்து, தற்பொழுது நடைமுறையில் உள்ள கோட்சார கிரகங்களின் தன்மைக்கு ஏற்ப ராசி பலன்களை சொன்னார்கள், இந்த வழக்கம் அப்படியே தொடர்ந்தது, தற்பொழுதும் ராசி பலன் காணும் முறை  நடைமுறையில் இருப்பதிற்கு இதுவே காரணமாக இருக்கும், ஆக ஒரு ஜாதகருக்கு பிறந்த நேரம் தெரியாமல், அவரது ஜாதகம் தெரியாமல் நட்சத்திரம் மற்றும் ராசி அமைப்பை வைத்து பலன் அறிந்துகொண்ட முறை, தற்பொழுது உள்ள நவீன உலகத்திற்கு எப்படி பொருந்தும்.

அந்த காலங்களில் நிலத்தில் உளவு செய்ய கால்நடைகள் மற்றும் ஏர் கலப்பையை நாடினர், ஆனால் தற்பொழுது நிலத்தில் உளவு செய்ய டிராக்டர் போன்ற அதி நவீன கருவிகளை பயன்படுத்துகிறோம், அதெல்லாம் முடியாது  நான் கால்நடைகள் மற்றும் ஏர் கலப்பையைதான் பயன்படுத்துவேன் என்றா சொல்கிறோம், இதை போன்றுதான் இருக்கிறது ராசி பலன் காணும் முறையும், தற்பொழுது ஒருவரின் பிறந்த நேரத்தை தெளிவாக தெரிந்துகொள்ள நமக்கு வாய்ப்புகள் அதிகம், இதை கொண்டு ஒருவரின் ஜாதகத்தை மிக துல்லியமாக எடுக்க இயலும், ஒருவேளை பிறந்த நேரத்தை தவறாக சொல்லி இருந்தாலும் கூட நமது ஜாதக கணித முறை கொண்டு குறிப்பிட்ட ஜாதகருக்கு சரியான பிறந்த நேரத்தை துல்லியமாக எடுக்க இயலும் அன்பர்களே !

ஆக சனி பெயர்சி பலன், குரு பெயர்சி பலன், ராகு கேது பெயர்சி பலன் என்பதெல்லாம் ஒரு ஜாதகரின் லக்கினம் என்னவென்பது தெரியாத நிலையிலும், தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம், சூட்சமம் ஆகியவை எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்ற விஷயம் தெரியாத நிலையிலும், அப்படி ஏற்று நடத்தும் பாவகங்களுடன் கோட்சார கிரகங்கள் வழங்கும் பலன் என்ன ? என்பது தெரியாத பொழுது சரியாக இருக்கும், துல்லியமாக ஜாதக கணிதம் செய்யும் ஜோதிடர்களுக்கு இந்த மேற்கண்ட குழப்பம் வர வாய்ப்பே இல்லை என்பதால், ஒருவரின் சுய ஜாதகத்திற்கு  லக்கினத்தை அடிப்படையாக கொண்டே பலன் காண வேண்டும்  என்பதை ஜோதிடதீபம் இந்த இடத்தில் நிதர்சனமாக வலியுறுத்துகிறது.

மேலும் கோட்சார கிரகங்களுக்கு  பரிகாரம் என்ற பெயரில் பரிகார திரு தளங்களில் சிலர் செய்யும் தவறுகளை இங்கே ஜோதிடதீபம் சுட்டிகாட்ட விரும்புகிறது, திரு தளங்களுக்கு செல்லும் அன்பர்கள் அங்கு உள்ள தீர்த்தத்தில் நீராடி தமது ஆடைகளை அந்த தீர்ததிலேயே விட்டு சென்றுவிடுகின்றனர் , இது சரியானதல்ல என்று ஜோதிடதீபம் கருதுகிறது, திருநள்ளாறு திருத்தலத்தில் நள மகராஜா தனது சொத்து சுகம், வீடு, மக்கள் அரசு பதவி அனைத்தையும் இழந்து, அங்கு உள்ள நள தீர்த்தத்தில் நீராடும் பொழுது அவரின் அரைஞான் கயிறும் அறுந்து, ஆடையும் இழந்து பிறப்பில் குழந்தையின்  தன்மையை அடைந்த பொழுது, சனி பகவானின் அருட்பார்வை  மூலம் சகல நன்மைகளும் பெற்றதாக புராணங்கள் எடுத்துரைக்கிறது என்பதால், இது அனைவருக்கும் பொருந்தும் என்று நினைத்து தீர்த்தத்தில் தமது ஆடைகளை விட்டு செல்கின்றனர், கோவில் வழிபாட்டில் கோவிலை தூய்மையாக  வைத்திருப்பதே சரியான பரிகாரமாக இருக்க கூடும் அன்பர்களே! இதை போன்று கோவிலை அசுத்தம் செய்வது பாவ வினைகளை அதிகரிக்குமோ தவிர , பரிகாரமாக அமையாது என்பதால் இதை கருத்தில் கொண்டு கோவிலை பரிசுத்தமாக வைத்திருக்க உதவுங்கள்.

மேலும் எழரைச் சனி, அஷ்டமத்து சனி, அர்தாஷ்டம சனியின் பாதிப்புகள் என்பது சுய ஜாதகத்தில்  தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம், சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவக அமைப்புடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு பெற்றால் மட்டுமே நன்மை தீமை பலன்களை செய்யும், ராசிக்கு பலன் காணும் பொழுது நிச்சயம் ஜாதக பலன்களை தெளிவாக எடுத்து உரைக்க  இயலாது என்பதுமட்டும் உண்மை என்று ஜோதிடதீபம் கருதுகிறது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 8 நவம்பர், 2014

சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - ரிஷபம்




சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   

ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.

அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது .

ரிஷப லக்கினம் :

ரிஷப லக்கினத்திற்கு 7ல் அமர்ந்த நிலையில் சனிபகவான் ஜாதகருக்கு திடீர் என திருமண வாழ்க்கையை அமைத்து தந்துவிடுவார், சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு சனி பெயர்ச்சி ஆனா சில நாட்களில் உடனடியாக கிடைக்கும், இதன் மூலம் ஜாதகருக்கு மிகுந்த யோக வாழ்க்கை அமையும், தொழில் ரீதியான வெற்றிகள் எதிர்பாரா வண்ணம் ஜாதகருக்கு வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருந்து கிடைக்க கூடும், ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் யோகத்தை தரும், கூட்டு தொழில் செய்யும் அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி மிகுந்த யோகத்தை தரும், தொழில் விருத்தி மிகவும் அபரிவிதமாக இருக்கும், ஆண்கள் என்றால் பெண்கள் வழியில் இருந்தும், பெண்கள் என்றால் ஆண்கள் வழியில் இருந்தும், வருமான வாய்ப்புகள் அமையும் யோகம் உண்டாகும், ஜாதகரின் மன நிலையில் சிறந்த மாற்றங்களும், மன மகிழ்வுக்கு உண்டான புதிய சூழ்நிலைகளும் இந்த சனிபெயர்சி காலத்தில் நிச்சயம்  உருவாகும், ரிஷப லக்கினத்தை சார்ந்தவர்கள் 7ம் பாவக வழியில் இருந்து 100% யோக பலன்களை அனுபவிக்கும் நல்ல நேரம் வந்துவிட்டது என்று ஜோதிடதீபம் கட்டியம்  கூறுகிறது வாழ்த்துகள்.

ரிஷப லக்கினத்திற்கு 6ம் பார்வையாக 12ம் பாவகத்தை பார்க்கும் சனிபகவான் ஜாதகருக்கு முதலீடு செய்த அமைப்பில் இருந்து மிகப்பெரிய லாபத்தை ஈட்டிதருவார், குறிப்பாக கட்டுமான துறை அமைப்பில் இருந்தும், மருத்துவ துறை அமைப்பில் இருந்தும் மிகப்பெரிய லாபம் கிடைக்க பெரும், இந்த இரண்டு துறையை சார்ந்தவர்களுக்கு இனிவரும் இரண்டரை வரும் மிகவும் சிறப்பாக இருக்கும், பொதுவாக 12ம் பாவகம் முதலீடு மற்றும் ஆன்மீக வெற்றி என்ற அமைப்பில்  பலன் தரும் என்பதால் ரிஷப லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு இது ஒரு பொற்காலம், மேலும் இதுவரை நல்ல தூக்கம் இல்லாமல் தவித்து வந்த ரிஷப லக்கினத்தாருக்கு நல்ல உறக்கமும், நிம்மதியான வாழ்க்கையும் கிட்டும், இதன்மூலம் ஜாதகர் எவ்வித குழப்பமும் இல்லாத மன நிலையுடன் அனைத்தையும் எதிர்கொள்ளும் வாய்ப்பை தரும், நெடுநாள் கனவுகள் ரிஷப இலக்கின ஜாதகர்களுக்கு பலிதம் பெரும் காலம் இதுவென்பதால், இவர்களின் செயல்பாடுகள்  இனிவரும் காலங்களில் புதிய உத்வேகத்துடன் இருக்கும், சிறந்த வெற்றிகளை பெற ஜோதிடதீபம் வாழ்த்துகிறது.

 ரிஷப லக்கினத்திற்கு 7ம் பார்வையாக லக்கினத்தை பார்க்கும் சனிபகவான், நேற்று வரை வருமானத்திற்காக போராடி கொண்டிருந்த நபர்களுக்கு, இன்றுமுதல்  ஸ்திரமான வருமானத்தை பெரும் யோகத்தை தருவார், ஏதாவது ஒரு வகையில் ஜாதகர்களுக்கு  வருமானம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும், செய்யும் தொழில் ஸ்திர தன்மையுடன் செயல்பட ஆரம்பிக்கும், அதன் வழியில் இருந்து நல்ல வருமானம் கிடைக்க ஆராம்பிக்கும், ஜாதகரின் பேச்சு திறமை பலர் மெச்சும் வண்ணம் அமையும், செய்யும் தொழில் மேன்மை தீர்க்கமான வாதத்திறமை ஆகியவை ஜாதகருக்கு நிலையான வாழ்க்கையை அமைத்து தரும், இதுவரை திருமணம் ஆகாத  அன்பர்களுக்கு இனிவரும் காலங்களில் சிறப்பாக திருமணம் நடக்கும், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை நிச்சயம் அமையும் என்பதால் உடனடியாக ரிஷப இலக்கின அன்பர்கள் திருமணதிற்கு உண்டான முயற்சிகளில் இறங்கலாம், இனி வரும் காலம் சனிபகவான் ரிஷப லக்கினத்தாருக்கு சனிபெருக்கமாக  யோகங்களை வாரி வழங்குவார், வாழ்த்துகள் .

ரிஷப லக்கினத்திற்கு 10ம் பார்வையாக 4ம் பாவகத்தை பார்க்கும் சனிபகவான் இறை அருளின் அனுகிரகத்தல் சகல விதமான சுக வாழ்க்கையையும் அனுபவிக்கும் வல்லமையை தருகிறார், ஜாதகரின் குல தெய்வத்தின் அருளால் தனது  அறிவாற்றலின் தன்மையினாலும், சமயோசிதான புத்திசாலிதனத்தால் சாதிக்க முடியாது என்று நினைத்த நிகழ்வுகளை மிக எளிதாக வெற்றிகொள்ளும் வாய்ப்பை தரும், புதியதாக வீடு வாங்கும் யோகம் அல்லது கட்டும் யோகத்தை தரும், புதிய வண்டி வாகனம், சொத்து, புதிய தொழில் துவங்கும் வாய்ப்பு என ஜாதகருக்கு யோக பலன்களை சனிபகவான் தொடர்ந்து வழங்கி வண்ணமே இருப்பார் என்பதால் ரிஷப லக்கினத்தை சார்ந்தவர்கள், இனிவரும் நல்ல வாய்ப்புகளை  சரியாக பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவது அவசியமாகிறது, மேலும் ஜாதகருக்கு உதவி செய்ய பலர் காத்து கொண்டு இருப்பார்கள் என்பது ஒரு நல்ல விஷயம், உதவி என்று எங்கு சென்றாலும்  ஜாதகருக்கு நிச்சயம் நினைத்தததை விட மிக அதிகமாகவே உதவிகள் கிடைக்கும், இங்கே சனிபகவான் ஜாதகர்களுக்கு சோம்பேறி தனத்தை தருவதால் சற்றே விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமாகிறது.

ரிஷப இலக்கின அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை மற்றும் புத்தி மேற்கண்ட 1,4,7,12ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே தங்களுக்கு மேற்கண்ட  சனிபகவானின் கோட்சார நன்மைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை 1,4,7,12ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க, வாழ்த்துகள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 7 நவம்பர், 2014

திருமண தடையும், நடைபெறும் திசை தரும் பாதக ஸ்தான பலன்களும்!

 

ஒருவரின் சுய ஜாதகத்தில் நடைமுறையில் இருக்கும் திசை பாதக ஸ்தான பலன்களை வழங்கினால், அவரது ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்களின் வழியில் இருந்து கூட எவ்வித நன்மையையும் பெற இயலாது, சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெறுவது சிறப்பான விஷயம் அல்ல, நடைமுறையில் வரும் திசாபுத்திகள் ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவகங்களின் பலன்களை ஏற்று நடத்துவதே ஜாதகருக்கு சிறந்த நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும், பலரது ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும், ஆனால் நடைமுறையில் இருக்கும் திசை ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருக்கும், இதன் காரணமாக ஜாதகர் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து எவ்வித யோக பலன்களையும் பெற இயலாத சூழ்நிலையில் ஜீவனம் செய்யும் தன்மையை பெற்று இருப்பார், இந்த அமைப்பை நாம் ஒரு உதாரண ஜாதகம் கொண்டு இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே !


லக்கினம் : கடகம் 
ராசி : கும்பம் 
நட்சத்திரம் : சதயம் 1ம் பாதம் 

ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவகங்கள் :

1,3,4,6,7,9,10,12ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 2,5ம் வீடுகள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், ஜாதகிக்கு 90% யோக பலன்களை மேற்கண்ட பாவக வழியில் இருந்து தரும்.

ஜாதகத்தில் வலிமை இழந்த பாவகங்கள் :

8ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு மேற்கண்ட  பாவக வழியில் இருந்து 70% இன்னல்களையும், 11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாதக ஸ்தான அமைப்பில் இருந்து ஜாதகிக்கு 200% இன்னல்களை ஸ்திரமாக வாரி வழங்கும் .

ஜாதகிக்கு கடக லக்கினம், தற்பொழுது நடைபெறும் குரு திசை, குரு பகவான் லக்கினத்தில் அமர்ந்து ( லக்கினம் கடகத்தில் 111:07:10 பாகையில் ஆரம்பித்து சிம்மத்தில் 139:46:42 பாகையில் முடிவடைகிறது, குரு பகவான் சிம்மத்தில் லக்கினத்திற்கு உற்பட்ட 135:29:40 பாகையில் அமர்ந்திருக்கிறார் ) மேற்கண்ட அமைப்பை  பார்க்கு அனைத்து பாரம்பரிய ஜோதிடர்களும், குரு பகவான் அமர்ந்து இருக்கும் நிலையை வைத்து குரு திசை யோக பலன்களை தருவதாக சொல்வார்கள், ஆனால் உண்மையில் ஜாதகிக்கு குரு லக்கினத்தில் அமர்ந்தாலும், தான் ஏற்று நடத்தும் பாவகம், பாதக ஸ்தானமாக இருப்பதால் ஜாதகி குரு திசையில் எவ்வித யோக பலன்களையும் அனுபவிக்க வில்லை, மேலும் ஜாதகியில் பாதக ஸ்தானம்  கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2 மற்றும் 3ம் வீடாக வருவது ஜாதகிக்கு மண் தத்துவ அமைப்பில் இருந்து சிறு உடல் நல குறைவினையும், 3ம் வீடு அமைப்பில் இருந்து எடுக்கும் முயற்சிகள் யாவும் பெரிய தோல்வியை வாரி வழங்கியது .

எனவே ஒருவரின் சுய ஜாதகத்தில் ஒரு கிரகம் அமர்ந்து இருக்கும் இடத்தின் பலனை  தனது திசையில் தரும் என்று  கருதி பலன் காண்பது உண்மைக்கு மாறான பலன்களை ஜாதகருக்கு சொல்ல வேண்டிய சூழ்நிலையை தந்துவிடும் , ஒரு கிரகம் எங்கு அமர்ந்து இருந்தாலும் சரி சுய ஜாதக அமைப்பின் படி எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்ற உண்மை உணர்ந்து பலன் சொன்னால் மட்டுமே, அது சரியான ஜாதக கணித பலன்களாக  இருக்கும் , இந்த ஜாதகிக்கு குரு திசை முழுவதும் ( 03/07/2009 முதல் 03/07/2025 வரை ) பாதக ஸ்தான பலனை தருவதால் ஜாதகியின் வாழ்க்கை கல்வி,வேலை,திருமணம் எனும் அனைத்து  விஷயங்களும் சரியாக அமையாமல், தனது வீட்டில் சூழ்நிலை கைதியாக முடங்கும்  தன்மையை தருகிறது, ஜாதகியின் விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறாமல் மனோ ரீதியான போராட்டங்களையும், மன அழுத்தத்துடனும் வாழ்க்கையை நகர்த்த வேண்டிய சூழ்நிலை உருவாகிறது , இதைவிட கொடுமையானது இதற்க்கு முன் நடந்த  ராகு திசையும் ( ஜாதகி ஜெனனம் முதல் ) பாதக ஸ்தான பலனை தந்ததே  அதிக வருத்தத்திற்கு உரியாது , 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டம் செயல்படாமல் துரதிர்ஷ்டம் பலனை தந்து ஜாதகியின் வாழ்க்கையில் அதிக இன்னல்களுக்கு ஆளாக்கியது என்றே சொல்லலாம்.

ஜாதகிக்கு தற்பொழுது  திருமணம் செய்வதற்காக கடந்த இரண்டு வருடமாக வரன் பார்த்துகொண்டு இருக்கின்றனர் அவரது பெற்றோர்கள், ஜாதகிக்கு குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் சுய ஜாதகத்தில் வலிமை பெற்று இருந்த போதிலும் தற்பொழுது  நடைபெறும் குரு திசை பாதக ஸ்தான பலனை ஏற்று   நடத்துவதால் ஜாதகிக்கு வரும் வரங்கள் யாவும் தட்டி போகிறது, அல்லது இவர்கள் தட்டி கழிக்கிறார்கள், இதனால் ஜாதகிக்கு அவரின் பெற்றோர்கள் எடுக்கும்  திருமண முயற்ச்சிகள் யாவும் இறுதியில் தோல்வி என்ற நிலையையே தருகிறது, ஜாதகி பாதக ஸ்தான வழியில் இருந்து எவ்வித அவயோக பலன்களை  எதிர்கொள்ள வேண்டி வருகிறது என்பதை இனி சிந்திப்போம்  அன்பர்களே !

ஜாதகியின் பாதக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ரிஷபம் மற்றும் மிதுன ராசிகளில் பகிர்ந்து நிற்பதால் , ரிஷப ராசி அமைப்பில் இருந்து ஸ்திர மண்  தத்துவ அமைப்பிலும், மிதுன ராசி அமைப்பில் இருந்து உபய காற்று தத்துவ அமைப்பில் இருந்து அதிக இன்னல்களை எதிர்கொள்ளும் அமைப்பை தருகிறது , அதாவது ஜாதகிக்கு ரிஷப அமைப்பில் இருந்து சிறந்த குடும்பம் அமைவதற்கு உண்டான வாய்ப்பை குறைக்கிறது, கல்வியில் தடை, வருமான  வாய்ப்புகளை பெற இயலாத சூழ்நிலை, மற்றவரிடம் தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபடும் தன்மை, மற்றவரை கடுமையாக விமர்சித்தல் போன்ற செய்கைகளால் ஜாதகியின் நர்ப்பெயர் வெகுவாக பாதிக்க படுகிறது, மிதுன அமைப்பில் இருந்து  ஜாதகியின் அறிவு திறன் வெகுவாக பாதிக்க படுகிறது, எந்த ஒரு விஷயத்தையும் முழுதாக ஆராயாமல் முட்டாள் தனமான செய்கையினால் , தனக்கு வரும் நல்ல வாய்ப்பினை தானே உதறித்தள்ளும்  தன்மையை இந்த அமைப்பு தருகிறது.

மேற்கண்ட ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் 8,11ம் வீடுகளை தவிர மற்ற அனைத்து பாவகங்களுக்கு  மிகவும் நல்ல நிலையில் வலுவாகவே இருந்த போதிலும், ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் குரு திசையும் சரி, இதற்க்கு முன் நடந்த ராகு திசையும் சரி ஜாதகிக்கு பாதக ஸ்தான பலனையே ஏற்று நடத்துவதால், ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கும் பாவக வழியில் இருந்து எவ்வித யோக பலன்களையும் அனுபவிக்க இயலாமல் பாதக ஸ்தான பலனை மட்டுமே அனுபவிக்கும் தன்மையை தருகிறது, எனவே அன்பர்களே ! சுய ஜாதகத்தில்  பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது மட்டும் நன்மையை தர வாய்ப்பில்லை, நடைமுறையில் வரும் திசை புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே யோக பலன்களும், நன்மைகளும் நடைமுறைக்கு வரும், இதற்க்கு மாறாக சுய ஜாதகத்தில் பாவகங்களும், நடைபெறும் திசா புத்திகள் அமையும் பொழுது, ஜாதகர் யோக வாழ்க்கையை பற்றி கற்பனையில் மட்டுமே வாழ இயலும், நடைமுறையில் எவ்வித யோக பலன்களும் வர வாய்ப்பில் என்பது முற்றிலும் உண்மை.
 
வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

வியாழன், 6 நவம்பர், 2014

"குரு பார்க்க கோடி நன்மை" திரிகோண வீடுகளுக்கு குரு பகவான் வழங்கும் யோக பலன்கள் !



பிரகஸ்பதி என்று தேவர்களால் அலைக்கபெரும் ராஜ கிரகமான குரு பகவான், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசிக்கும், மோட்சத்தை தரும் 12ம் பாவகமான மீன ராசிக்கும் அதிபதியாக விளங்குகிறார், பொதுவாக ஜோதிடர்கள் குரு பகவானை பற்றி சிலாகித்து பேசுவது அவரின் பார்வை பலன்களை பற்றியதாகவே இருக்கும், குறிப்பாக " குரு பார்க்க கோடி நன்மை " என்ற வாசகம் அறியாத ஜோதிட ஆர்வலர்கள் இல்லை எனலாம், இந்த ஒரு வார்த்தையிலேயே குரு பகவான் பார்வை தன்மையின் வலிமையை உணரலாம் அன்பர்களே!

பொதுவாக குரு பகவான் தான் அமர்ந்த இடத்தில் இருந்து 5,7,9ம் வீடுகளை பார்வை செய்து பலன்களை வழங்குவார், இந்த அமைப்பு சுய ஜாதகத்தில் குரு பகவான் எந்த நிலையில் ( அதாவது பாவகத்தில் ) அமர்கிறார் என்பதை வைத்தே குரு பார்வையின் தன்மையை நிர்ணயம் செய்ய வேண்டும், குரு பார்க்கும் பார்வையால் ஜாதகருக்கு நன்மை நடைபெறுமா ? அல்லது தீமை நடைபெறுமா ? என்று நிர்ணயம் செய்வது அவசியம், பொதுவாக பல ஜோதிடர்கள் குரு பார்வை நன்மை மட்டுமே வழங்கும் என்று சொல்வதுண்டு, இது எந்த அளவிற்கு உண்மை என்பதை இன்று ஆய்வுக்கு எடுத்துகொள்வோம்.

பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் குரு பகவான் 1,3,5,9,11ம் பாவகங்களில் அமரும் பொழுது அந்த ஜாதகர் மேற்கண்ட அமைப்பில் அமர்ந்த பாவக  வழியில் இருந்தும், குரு பகவானின் பார்வை பெரும் பாவக வழியில் இருந்து 100% சதவிகித யோக பலன்களையே பெறுவார்கள், இதில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை, ஆனால் இதை தவிர்த்து வேறு பாவகங்களில் ( 2,4,6,7,8,10,12ம் பாவகங்களில்) அமரும் பொழுது ஜாதகருக்கு அமர்ந்த நிலையிலும் சரி, கோட்சார நிலையிலும் சரி ஜாதகருக்கு இலக்கின அமைப்பில் பாவக அடிப்படையில் நன்மையை மட்டுமே செய்வார் என்ற கருத்து நிச்சயம் தவறும் வாய்ப்பு உள்ளது.

 குரு பார்வை என்பது சுய ஜாதகத்தில் 1,3,5,9,11ம் வீடுகளில் அமர்ந்து, 1,3,5,9,11ம் வீடுகளை பார்வை செய்யும் பொழுது மட்டுமே கோடி நன்மையை தரும், மாறாக வேறு பாவகங்களில் அமரும் பொழுது முரண்பட்ட பலன்களையே தருகிறது என்பது, 2,4,6,7,8,10,12ம் பாவகங்களில் அமர்ந்த ஜாதகரை பார்த்தல் தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் மேலும் 2,4,6,7,8,10,12ம் பாவகங்களை பார்க்கும் குருபகவான் நிச்சயம் 2,4,6,7,8,10,12ம் பாவகங்களுக்கு நன்மையை செய்ய வாய்ப்பில்லை என்பது மட்டும் உறுதி அன்பர்களே !

குரு வட்டமான மேஷம்,சிம்மம்,தனுசு ராசிகள் ஒருவரின் லக்கினத்திற்கு கோண வீடுகளாக ( 1,5.9 ) அமைந்து அந்த வீட்டில் குரு பகவான் அமர்ந்தால் அந்த ஜாதகருக்கு தான் அமர்ந்த நிலையில் இருந்தும், குரு பார்வை என்ற அமைப்பில் இருந்தும் ஜாதகருக்கு 100% நன்மைகளை வாரி வழங்குவார், மேலும் " குரு பார்க்க கோடி நன்மை " எனும் வாசகம் மேற்கண்ட அமைப்பை பெற்ற ஜாதகருக்கு நிச்சயம் 100% பொருத்தமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை அன்பர்களே !

மேஷத்தில் குரு பகவான் அமர்ந்து  மேஷம் சுய ஜாதகத்தில் 1,5,9ம் பாவக நிலையை  பெற்றால் :

ஜாதகரின் உடல் வலிமை மனோ வலிமை அதிகரிக்கும், மற்றவர்களுக்கு ஜாதகர் நல்ல முன்  உதாரணமாக இருப்பார், சர நெரப்பு தத்துவ அமைப்பை இந்த ராசி பெறுவதால் ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் பலர் மெச்சும் வண்ணம் அமைந்திருக்கும் குறிப்பாக, ஜாதகர் நல்ல மேலாண்மை திறனை பெற்று இருப்பார், அனைவரிடமும் அனுசரித்து செல்லும் தன்மையையும், சுய கட்டுபாடுடன்  கூடிய ஒழுக்க சீலராக காணப்படுவார், ஜாதகர் தான் நினைக்கும்  செயல்களை யாவும் முடிக்கும் வல்லமையை பெற்று இருப்பார், குறிப்பாக ஜாதகரின் பாதுகாப்பில் அனைவரும் நலமாக இருக்கும் யோகத்தை தரும், ராணுவம், காவல் துறை, நீதி துறை போன்றவற்றில் சிறந்து விளங்கும் தன்மைய தரும், மேஷத்தில் குருபகவானின் செயல்திறன் என்பது மிகவும் அபரிவிதமான வல்லமையை பெற்று இருக்கும், அதிகார தோரணையும் அடக்கியாளும் யோகமும் பெற்றவர்கள், தனது செயல்களில் நேர்மையையும், தர்மத்தையும் நிலைநாட்டும் மதிப்பு மிக்க மனிதர்களாக ஜொலிப்பார்கள்.

சிம்மத்தில்  குரு பகவான் அமர்ந்து  சிம்மம்  சுய ஜாதகத்தில் 1,5,9ம் பாவக நிலையை  பெற்றால் :

ஜாதகரின் அறிவு திறன் பிரகாசிக்கும், பல ஆன்மீக நெறிகளை மக்களுக்கு போதிக்கும் வல்லமையும், மனிதாபிமானம் அற்ற சமுதாயத்தை மற்றும் தன்மையையும், உலகுக்கு சமாதானத்தை எற்ப்படுத்து யோகமும் பெற்றவர்கள், மருத்துவ துறை, ஆன்மீகம், மன நலம், ஜீவ காருண்யா யோகம் போன்றவற்றில் வெற்றி பெரும் அன்பர்கள், இவர்களின் அறிவு திறனும் நல்லெண்ண செயல்பாடுகளும் பூஉலகில் சாமாதான தூதுவர் என்ற நற்ப்பெயரை பெற்று தரும், இந்த ராசி ஸ்திர ராசி அமைப்பில் வருவதால் ஜாதகர் இருள் அடைந்த உலகில்  அருள் விளக்கேற்றும் சிறந்த ஆன்மீக வாதியாகவும், இருப்பதை அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கும் பொதுநல புரட்சியாளனாகவும், உலகத்தை அன்பின் வழியில் நடத்தி செல்லும் நல்ல மக்கள் நல  விரும்பியாவும் தனது அறிவின் வழியில் ஜாதகரை பிரகாசிக்க செய்யும்.

தனுசுவில்  குரு பகவான் அமர்ந்து  தனுசு  சுய ஜாதகத்தில் 1,5,9ம் பாவக நிலையை  பெற்றால் :

ஜாதகரின் எண்ணங்களின் தன்மை உலகில் பல மாற்றங்களை ஏற்ப்படுத்தும், ஜாதகர்  ஒரு புதுமை விரும்பியாகவும், சமூகத்திலும் மக்களின் மனதில் புதிய சிந்தனைகளை புகுத்தும் வல்லமையும், மக்கள் அறிவின் வழியில் செயல்படும் தன்மையை பெற தேவையான கல்வியில் அனைத்து நிலைகளிலும் சிந்தித்து செயலாற்றும் யோகத்தை பெற்றவர்கள், இவர்களின் சிந்தனை  எண்ணம் யாவும் இவர்கள் மறைந்த போதிலும் உலகில் நடைமுறையில் இருக்கும், மக்கள் அனைவருக்கும் வற்றாத செல்வத்தை தரும் காமதேனுவை போல் நீடித்து நன்மைகளை வாரி வழங்கி கொண்டு இருக்கும், ஒருவருக்கு ஏற்ப்படும் சந்தேகம் எதுவென்றாலும் இவர்களிடம் நிச்சயம்  சரியான  பதில் இருக்கும் என்பதால், மற்றவர்களின் அறிவு தாகத்தை தணிக்கும் அமுத சுரபி என்று இவர்களை வர்ணிக்கலாம், மேலும் இந்த ராசி உபய நெருப்பு தத்துவ அமைப்பில் யோகங்களை ஜாதகருக்கும், ஜாதகரை சார்ந்தவர்களுக்கு வாரி வழங்கும்.

இதை போன்றே ஒருவரின் சுய ஜாதகத்தில் கோட்சார அமைப்பில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் சில எதிர்பாராத யோக அமைப்புகளை பெற வைப்பது 1,5,9ம் பாவக வலிமை பெற்ற அமைப்பின் தன்மையே என்றால், அது மிகையாகாது. குருபகவான் குரு வட்டமான மேஷம்,சிம்மம்,தனுசு ராசிகள் உயிர்களை உய்விக்கும் தன்மை கொண்ட நெருப்பு தத்துவ அமைப்பில் சரம்,ஸ்திரம்,உபயம் என்ற வழியில் ஜீவன்களுக்கு நன்மைகளையும், யோகங்களையும் ராஜ கிரகமான குரு பகவானின் அமர்ந்த, பார்த்த அமைப்பில் இருந்து வாரி வழங்குகிறது, மேலும் மற்ற பாவகங்களில் குரு பகவான் வழங்கும் நன்மையை கருத்தில் எடுத்து கொள்ளும் பொழுது, மேற்கண்ட  1,5,9ம் பாவகங்களுக்கும், மேஷம்,சிம்மம்,தனுசு ராசிகளில் 100 மடங்கு அதிகமாக செயல்படுவதை இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்களின் யோக வாழ்க்கையை  வைத்து மிக எளிதாக நிர்ணயம் செய்யலாம்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696